எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உந்தன் நிழல் 
உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி

நீயும் நானும் ‌சேர்ந்து கை கோர்த்து 
உலகத்தை ரசிக்க

நான் ரசித்த புடவையின் மடிப்புகளை ஆராய

என்னை காக்க வைத்த 
கணத்த இதயத்தை காண

ஓவ்வொரு நாழிகையும் நகையாடிய
புன்னகையை புரிந்து கொள்ள 

உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி

உன் வியர்வை துளிகள் வெல்லமென எறும்பின் வாக்கின்படி சுவைத்து பார்க்க 

உன் அங்கத்தில் தேடுகிறேன் என்  வாழ்நாளை

இது கனவாக இருக்காது கணவனாக  மாறுவதற்கு சில காலம் 

நிழலாக நினைக்காதே நிஜத்தில் நிற்பேன் திருமண கோலத்தில் உன்னுடன் 
உன்னோடு ஒரு நாளாவது உன் நிழலாக வாழ வேண்டுடி

மேலும்

தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின் 
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்

ஆகாச மின்னலென 
அங்கங்கள் நனைத்திருக்க 
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே

                   மேலாடை சரிந்திருக்க   மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால்              பார்த்துவிட்டு தலைகுனிந்தேன் 

வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க 
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்

கன்னிப்பூ தோப்பினிலே 
கனியிரண்டை கண்டதிலே 
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால் 

கண்ணாடி வளையலுந்தான்    கையோடு கலகலக்க 
என்னோட கையிரண்டும்     இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்

கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து                 காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென

மேலும்

கருமை இரவு தனிமை வெறுமையிலிருக்க, 


வெண்ணிற ஒளியில் தேவதை, 

என் நிலா 
வெண்ணிலா 
விழியில் பட்டது 
பொன் நிலா, 

தென்றலா சாரலா 
இசையாய் வந்த வான்நிலா,

ஆசையா ஆர்வமா நான் பேசி பழகியது உன்னிலா!

மேலும்

கள்ளூறும் கயல் விழியால் என்னைக் கட்டிப் போடனும். 


பள்ளுப் பாட்டும் பாடி 
ஆடு மயிலாய் ஆடிவரனும். 

கண் அசைவில் என் தேவை உணரனும். 

வஞ்சியே உன்னை கொஞ்சியே என் ஆயுள் கரையனும்.

வள்ளியே கள்ளி நீ தென் படாத வெண்ணிலா! 

கல்லே கடவுளே யாரவள் என்னவள்?.. 

மேலும்

வழியோரம் போகும் பெண்ணே..........!                                                                      விழியோரம் என்னை அழைத்து போகாதே.........!                                     பதம் பாக்கும் உன் பார்வையிடம் எனை காட்டி கொள்ளாதே.........

மேலும்



அனுபவம் ஒன்றே புரிய வைக்கும் வாழ்க்கை ஒரு வட்டமென 
காதலித்த பின் இடையில் கைவிட்டு பிரிகின்ற இருவரில் ஒருவர் வேறொருவருடன் இணைந்து வாழ்கின்ற காலத்தில் மீண்டும் பிரிவினை வருமானால் காதலித்தவரை நினைத்து வருந்துவதும் அவசரகதியில் எடுத்த முடிவை ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் மறுபடியும் சந்திப்பது வாழ்வு ஒருவட்டமென உணர்ந்திட செய்தல்  !

விழி வழியே சந்தித்து மெளன மொழி மூலம் உரையாடி இதயத்தால் இணைந்த காதலர்கள் பிரிந்த பின் உருவாகும் இந்நிலை தவிர்க்க 
சிறு ஊடலால் எழுவதை மனம் விட்டு பேசி உடனடி தீர்வு கண்டால் பிரிவதும் மீண்டும் இணைய துடிப்பதும் இல்லாத நிலை உருவானால் புரிதல் வலுவாகி இன்பமான வாழ்க்கை உருவாகும்  !


பழனி குமார் 
02.07.2023

மேலும்

நான் படிக்க அசைப்பட்ட உன் இதழை
உன் வீட்டு தோட்டத்து ரோஜா படித்துவிட்டது.
ஏனே எனக்கு குடுத்து வைத்தது அவ்வளவு தான்
ரோஜா முந்திக்கெண்டது.

மேலும்

ஒரு கவிதையின் காதலை ஒரு கலைஞ்சனாய் நேசிக்கின்றேன் 

மேலும்

என்னவளே ......!                                    காலமெல்லாம் நீ என்னோடு வருவாயென தெரிந்து இருந்தால், முன்கூட்டியே கட்டிருப்பேன், என்னருகில் உனக்கென்று ஒரு கல்லறையை , அந்த ஷார்ஜாகன் போல 

மேலும்

மேலும்...

மேலே