எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை மங்கும் அழகிய நேரம் யாரும் இல்லாத அழகிய...

மாலை மங்கும் அழகிய நேரம் 

யாரும் இல்லாத அழகிய வீடு
சுற்றிலும் இயற்கையின் பிள்ளைகள்
இந்த பேதையோ நிலவொளியில் மயங்கி நின்றேன்..
புதுப்பெண் போல் அலங்கரித்து
பேசா மடந்தை போல் வாய்மொழியற்று நின்றேன்..
கையிலோ தேநீர் குவளை...
தனிமைகூட இனிமை சேர்க்கும் நேரம்..
மங்கை இவளோ  சாரல் காற்று மேல்பட்டு பனிமலர் ஆனேனே...
ஊர் உறங்கும் ஜாமத்தில்
பிரைத்தேடும் பனித்துளி போல்
கால்நோக யாருக்காக காத்து கொண்டிருக்கிறேனோ?
தன்னை மறந்து யோசிக்கும் வேளையில்
பின்னிருந்து என்னவன் என்னை அணைத்திட 
குளிர் தேகம் சூடாகி மோகம் கொண்டேனே ...
தங்களின் ஆசைகளை கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இருந்தும்
பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வேளையில்
மௌனம் கூட இனிமை என்று உணர்ந்துக் கொண்டேன்...
மோகம்  கொள்ளும் போதெல்லாம் 
பெண்மையின் அச்சமோ தடுக்கிறது
என்னவனின்  ஒற்றைவிரல் தீண்டுகையில் 
தன்னை மறந்து நின்றேன்...
என்னவன் காதல்,காமம் 
இவ்விரண்டின் பொருள் என்று உணர்ந்தேன்...  

பதிவு : ரம்யா-பரணி
நாள் : 26-May-22, 4:16 pm

மேலே