_______கோபுர நிழலில் ஆ & நா______ கோடை வெய்யில்...
_______கோபுர நிழலில் ஆ & நா______
கோடை வெய்யில்
ஆலய கோபுரம்
கோபுர நிழலில் இருவர்
ஒருவர் ஆத்திகர்
மற்றவர் நாத்திகர்
ஆஹா கோபுர நிழல்
கடவுள் தந்த குளுமை
என்றார் ஆத்திகர்
இல்லை கற்சிற்பியின்
கலை வடிவம் தந்த குளுமை
என்றார் நாத்திகர்
ஆலயமும் கோபுரமும்
ஆண்டவனுக்குத்தானே ___ஆ
அவைகளை ஆண்டவனுக்கும்
நமக்கும் குளுமை நிழல் தர
உருவாக்கியது கற்சிற்பியின்
கலைத் திறன்தானே ____ நா
நிழல் விலக வெய்யில் சுட்டது
கடவுளின் கொடுமையோ இது
என்றார் நாத்திகர்
இல்லை கதிரவன் கொடுமை
என்றார் ஆத்திகர்
கதிரவன் கடவுளின் படைப்பு
என்பீர்களே பின் ? என்றார்
நாத்திகர்
போதும் அதோ சிற்பியின்
Show Room
கடவுள் சிலையாக நீ
தரிசி
நான் கலையாக ரசிக்கிறேன்
எதற்கு
ஓசியில் ஏசி கிடைக்கும்
ஆஹா பேசாமல் நுழைந்தனர்
ஆ & நா