எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........என்சோக கதைய...

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........என்சோக கதைய கேளு தாய்குலமே...... ஆமா தாய்குலமே .........(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?""நல்லா இருக்கண்டா ..... ""அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?""அது ஒன்னும் இல்லை மாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் ""ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?""இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா ""அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?""இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக ""சரி அதுக்கு என்ன ?""என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோகஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்குபோர்டு வக்கணும்? "(அடப்பாவிகளா .....நைட்டு 12 மணிக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு ""அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக ""சரி ......""அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? ""டேய் மாப்ள .... , ஏற்கனவே என்பொண்டாட்டிகிட்டபடுகேவலமா திட்டு வாங்கிட்டு இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையாஃபோன வச்சிட்டு படு ""ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது........... அதே நாய் தான்......டென்சனா போன ஆன் பண்ணி"என்னடா மாப்ள ?""சாரி மாமா கோவிச்சுக்காத............ தம்மடிக்கனும் தீப்பட்டிய காணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?""டேய் ............நீ சென்னைல இருக்க , நான் இங்க கோயமுத்துர்ல இருக்கண்டா ""இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன

நாள் : 29-Jul-14, 4:26 pm

மேலே