நீ வருவாய் என...!!!!!

குறுகிய என் நினைவுகளில்
உன் நினைவை சேமித்து வைக்க
இடமின்றி அலைகிறேன் நானே...!!
பொல்லாத உன் நினைவை
பொத்தி வைக்க முடியாமல்,
பூகம்பமாய் என்னுள் பொங்கி எழ
மகிழ்ச்சியடைகிறேன் நானே..!!
வெட்டி எறிந்துவிட நீ ஒன்றும் சுமையல்ல,
பட்டு தெரிந்துகொள்ள நீ ஒன்றும் வினையல்ல..!!
சொட்டு சொட்டாக வடித்த கண்ணீர் சொல்லும்,
நேசம் என்பது பாசமா இல்லை வேசமா என்று..??
உனக்கு பிடித்தவாறு என்னை மாற்றினேன்,
எனக்கு பிடித்தவாறு நீ மட்டும் மாறவில்லை,
காரணம் கேட்டால் உதாரணம் சொல்கிறாய்,
பித்து பிடித்தவனிடம் தத்துவம் பேசுகிறாய்..!!
மரண வெளிச்சம் ஒன்று மடி மீது பரவ,
மறைக்க நீ வருவாயென காத்திருந்தேன்,
நீ இல்லாத வெற்றிடம் கண்டு,
என் இதய எடை இழந்திருந்தேன்...!!!