நண்பனின் மறுபக்கங்கள்

நண்பன்,
எப்படி சொல்வது அவனை பற்றி,
நினைத்தால் சிரிப்பையும்,
சின்ன அழுகையும் தரும்,
அவனின் மறுபக்கங்கள்...!!!
இறந்த கால நினைவுகளுக்கு
உயிர்கொடுக்கும் அவனே,
சில நேரங்களில் உயிரையும் எடுக்கிறான்..!!!

நட்புக்கு எல்லை இல்லையென
நினைத்தால் அது அறியாமை..!!
எதற்கும் எல்லை உண்டு
அதில் இந்த நட்பும் ஒன்று..!!

கண்களில் எதிர்பாராத அன்பும்,
இதயத்திலே நமக்கொரு இடமும்
தந்த நண்பனால் மட்டுமே,
நம்மை வெற்றி பெறவும்,
தோற்கடிக்கவும் செய்ய முடியும்....!!

யாருமில்லா தனிமைக்கு அவன் தான் துணை,
நாம் கடந்த நிமிடங்களை
அவனும் நம்முடன் கடந்து வந்தான்,
சோகங்களில் துணை நின்றான்,
நம் மகிழ்ச்சியை புரிந்து கொண்டு
சிரிக்கவும் செய்தான்,
அழுகவும் செய்தான்,
அவன் போல் எவனும் இல்லை...!!

நட்பு கூட காதல் போல தான்
சொந்தமென பொறமை கொள்ளும்,
தனிமையில் ஏங்கி தவிக்கும்,
உடனிருக்கையில் அறியாமல்
பிரியும் நேரம் துடியாய் துடிக்கும்..!!

உண்மை நட்பில் நண்பன் மட்டுமே
சிறந்த நண்பனாகவும்,
எதிரியாகவும் இருக்க முடியும்...!!

எழுதியவர் : மனோ ரெட் (13-Jul-13, 4:30 pm)
பார்வை : 358

மேலே