அந்தோ பரிதாபம்

கடை வாயில் எச்சி ஒழுக
கண்ணிலே நீர் வடிய
காய்ந்த உதடும்
சிந்தின முக்கும்
சிடுக்குப் பிடித்த முடியும்
கிழிந்த ஆடையும்
அழுக்குப் படிந்த தேகமும்
கொண்ட ஒரு சிறு பெண்
சாலை ஓரத்தில் கிடந்தாள்.
மயக்கமுற்று

நாதியற்ற குழந்தை அவள்
தாயும் இல்லை
தந்தையும் ஓடி விட்டான்
அவளைத் தவிக்க விட்டு
கேட்பார் யாரும் இல்லை
பார்ப்பார் எவரும் இல்லை
சோறும் இல்லை தண்ணீரும் இல்லை
காய்ந்து சருகாகிப் போனாள்
பூவாக மலர வேண்டிய பெண்.
அந்தோ பரிதாபம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-Oct-13, 9:52 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 70

மேலே