இதயம் உன்னால் இயங்குதடி

என்னன்னமோ ஆகுது..என்
நெஞ்சம் உன்னை தேடுது..
ஆசைகரை மீறுது..நீ
பேச கேட்க தோனுது.
சொல்லிவிட்டு போய்விட்ட காதல..
இப்போ யார் பேச்சும் எனக்குள்ள ஏறல.
சற்றுமுன்வரை நான் நானாக இருந்தேன்.
உனைக்கண்டு பனியாய் புல் நுனியில் உறைந்தேன்.
மழையில் நனைந்திட பிடிக்குதடி..
அறையில் தனிமை வலிக்குதடி.
உதடு ஒட்டி கிடக்குதடி.
உள் வார்த்தைகள் ஊமையாய் இறக்குதடி.
இரக்கம் இல்லாத உறக்கமும்
எனைச்சேர மறுக்குதே..
இரவில் வலம் வரும் நிலவும் எனைக்கண்டு
ஏனோ சிரிக்குதே..
புத்தக வரிகள் ஏறவில்லை.
என் புத்தியில் நீ இன்றி வேறு இல்லை.
கத்திஇன்றி உன் விழிகள் என்னை
குத்தி குத்தி கொல்லுதே..
வத்தி போகும் ஜீவனும்
உன் மூச்சில் வாழ சொல்லுதே,..

எழுதியவர் : கு.தமயந்தி (31-Oct-16, 7:44 pm)
பார்வை : 918

மேலே