தமிழா தமிழா

தமிழா தமிழா..!!

தனியதோர் மழைத்துளி
விழுகின்றதென்று
குடை பிடிக்க நினைத்தாயோ..
தாயகம் காத்திட
மணித்துளி நேரத்தில்
கடலென பொங்கி எழுந்த
எம் தமிழ் இளைஞர்களை பார்.. விண்ணை முட்டும் கோஷத்துடன்
விதியை மாற்றும்
எம் இளஞ்சிங்கங்களை பார்..
சுனாமி வெள்ளத்தை போல்
தமிழ் இளைஞர்களின் அலைகண்டு
பயந்து ஓடிய குள்ள நரிகள் எங்கே.. திமில் கொண்ட காளையை போல்
தமிழன் என்ற
திமிர் கொண்டு சீரிபாயும்
எம் தமிழ் காளையர்களிடம்
சிக்கி விடாதீர்கள் ..
சிதைத்து விடுவார்கள்..
தமிழா தமிழா..
உன் அன்பிற்கும் ஒற்றுமைக்கும் தலை வணங்குகிறேன்..
பார் போற்றும் தமிழ் ஒற்றுமையை தலை நிமிர்ந்து பார் தமிழா..
காளைக்கும் காளையனாகிய நமக்கும் உள்ள
உணர்ச்சி மிகுந்த பந்தத்தை
பறை சாற்ற வா தமிழா..
தமிழா தமிழா..
கருத்துகளை மட்டும் அள்ளி இரைக்கும் கரைவேட்டிகள்
இனி வேண்டவே வேண்டாம்.. தமிழர்களுக்காய் ஒரு பாதை..
தமிழ் இளைஞர்களுக்காய் ஒரு பாதை..
தமிழ் தாயை காக்க ஒரு அமைப்பை உருவாக்க வா தமிழா..
புது யுகம் படைப்போம் வா தமிழா..
தமிழ் கடலில் கரை வேட்டிகள் எனும் மீன்கள் வாழ இடம் உண்டு..
அதே தமிழ் கடலை ஆள தமிழ் இளைஞர்கள் எனும் அலைக்கு மட்டும் தானே உரிமை உண்டு..
தரணி ஆள்வோம் வா தமிழா..

இவன்
நாகரீக கோமாளி

எழுதியவர் : குட்டி அ முத்துகுமார் என் (19-Jan-17, 6:08 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : thamila thamila
பார்வை : 3296

மேலே