உயிர் துவண்டு கிடக்கிறேன்

சின்ன கோபம் தான்
சரியாகிவிடும் என்று
அவளை நினைத்து
என்னை தினமும் தேற்றிக்கொண்டேன், அவளைத் தேற்ற மறந்து.....
தேற முடியாத துயர் தந்து
சரியாகாத காயம் தந்து
மண்ணில் புதைந்தாள்.......
மனதில் புதைந்ததை மறந்து,
புதிதாய் மலர்ந்த மலர்
உரியவர் சூடும் முன்னே
உலர்ந்துதிர்ந்தாயே.........
உயிர் துவண்டு கிடக்கிறேன்......
உயிரே நீ போனதால்..

எழுதியவர் : மீனாட்சி (16-Feb-17, 8:29 pm)
பார்வை : 269

மேலே