மௌனம் கலைத்துவிடு மலரே 555

சகியே...

உன் மௌன சிறையில்
இருந்து மீண்டுவா...

உன் பரவசமூட்டும் கண்களை
எனக்கு தரிசனம் கொடு...

என் பூக்களை உன்
கூந்தலில் சூடிக்கொள்...

கண்ணீர் சிந்தாத
உன் கண்களில்...

நான் என்றும்
என்னை காணவேண்டும்...

பலரேகைகள் கொண்ட
உன் இதழ்களில்...

நான் என்றும் புன்னகையை
காணவேண்டும்...

உன் சொற்களுக்கு கவியரங்கம்
நடத்துவேன் நான்...

இன்னும் எதற்கடி
மௌனம் என்னோடு நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Mar-17, 8:18 pm)
பார்வை : 874

மேலே