முடிந்தது எது
எரிமலையாய் மனமது
தகிக்க அதில்,
எரிக்கின்ற எண்ணெயாய்
உன் நினைவுகள்
முடிந்து போனது இனி
எல்லாம் என்று
நீ சொல்ல கேட்டு
மனதோடு,உடலும்,
முடமாய் முடங்கிப்போக
முடித்துக்கொள்ள முடிவெடுத்தே
மலைமுகட்டிற்கு வந்தபின்,
என் முயற்சிக்கு
முட்டுகட்டையாய் உன்
முகவெட்டு
கண்முன்னே எனை
முத்தமிட துடிக்கிறதே!
எனில்?நமக்குள்,முடிந்தது எது?
#sof_sekar