உன் சேயாக
உன்னை இழப்பதற்கு
இறப்பதே மேல்...
இறப்பை தருவாயெனில்..
பிறப்பையும் தா..
உன் சேயாக..!
ஓராயிரம் நண்பர்கள் வேண்டா..
ஒரு தோழி போதும் உன்னைப்போல...
ஓடிவந்திடுவார்கள்..
ஓராயிரம் பேரும் என்னைபோல...
சகியாய்..
சகலமும் சொல்லிடுவாய்
என்னிடம்...
உன் பிரிவுக்குபின்..
உன் நினைவுகளை..
எப்படி மறக்கவேண்டும் என்பதைத்தவிர..!
ஆனந்தம் ஆயிரமிருந்தும்..
ஆனந்த படமுடியவில்லை...
அரைநொடியும்..
ஆறு யுகமாக தெரிகிறது..
அருகே நீ இல்லாததால்...
காணாமல் தொலைந்துபோன..
கடந்த கால நினைவுகள்..
கண்ணீர் திவளைகளாய்..
கண்களில்..!
***************
சிகுவரா
ஆகஸ்டு 2004