மின்னல்

மேகத் திரை விலக்கி

வனிதையவள் வானத்து

வீதிகளின் அழகினை

ரசிக்கிறாளோ??

அவளது பார்வையின் ஒளி

மின்னலென பளிச்சிடுகிறதோ???

அன்றி - அவளது குமுதவாய் மலர்ந்து

புன்னகை பூக்கிறாளோ??

வெண்பற்கள் முத்துக்கள் என மின்னி

மின்னலாய் கண்ணைப் பறிக்கின்றனவோ!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 5:57 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 289

மேலே