ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

சிரித்தான் பிச்சைக்காரன்
சாலையோர வியாபாரி
கையேந்தும் காவலர் !

உண்மை
நுணலும் தன் வாயால் கெடும்
அரசியல் தலைவர் !

வருந்தியது
மரம்
பிரிந்த இலைகள் !

பேசும் சிலை
நடக்கும் ஓவியம்
அவள் !

சிறகுகள் இருந்தும்
வானில் பறப்பதில்லை
வாத்து !

வேண்டா வெறுப்பாக
அபராதத்திற்குப் பயந்து
தலைக்கவசம் !

பிடித்தால் மாட்டலாம்
பின்னால் மனைவியிடம்
தலைக்கவசம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Mar-12, 7:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 262

மேலே