தம்மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்க காப்பாற்றப் படையெடுக்காமல் பேனா...
தம்மக்கள்
களத்தில்
போராடிக் கொண்டிருக்க
காப்பாற்றப்
படையெடுக்காமல்
பேனா பேப்பர் எடுத்தார்
எம் மன்னர்.!!
'போரின்போது
புலவர்கள்தானே
பாடலெழுதுவர்.?'
அவரும் புலவர்தானையா!!
"செம்மொழியான
தமிழ்மொழியாம்"....
'எல்லோரும் செத்தபிறகு
யார் பேசுவர் செம்மொழி?'
பிணம் தின்னும்
கழுகுகள்தான்.!!