புதிய தொடர் ..... வேறு நிலாக்கள் நூல் தொடர்...
புதிய தொடர் .....
'காலச்சுவடுகள் '
(தொடரின் தற்காலிக தலைப்பு)
இனிய கிராமிய சந்தங்கள், பலவேறு சந்த வடிவங்கள் , அழகிய விருத்தங்கள், தூய மரபுகள், எந்த வகைமையும் பூணாத ஆனால் ஒழுங்கான சீர்களும் புதிய வடிவங்களும் கொண்ட அழகிய கவிதைகள் இத்தொடரில் பதிவாகும். வெறும் பிரச்சாரக் கவிதைகள், கோஷங்கள் , நேரடி அறிவுரைகள் இல்லாமல் நயம்,சுவை கொண்ட இனிய கவிதைகள் மட்டுமே இங்கு இடம் பெறும். இந்நூல்தொடரில் ஆர்வம் உள்ளவர்கள் புதிய அல்லது பழைய படைப்புகளை தெரிவு செய்து மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
40 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ்மாநாட்டில் முதல் பரிசு பெற்ற குருவிக் கரம்பை சண்முகம் அவர்களின் "புகாரில்ஒரு நாள் " என்ற அபூர்வ கவிதை உட் பட தமிழொளி, வல்லம்வேங்கடபதி , நா.காமராசன், மீரா, சிற்பி, வைரமுத்து, இன்னும் பல முன்னோடிகளின் முத்துக்கள் சிலவும் தேடி கொண்டு வந்து இந்நூலில் சேர்க்கப்பட்டு ஒரு காலப் பெட்டமாகத் தரப்படும்.. இந்நூலும் சாகித்ய அகடெமி, தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் மன்றங்களில் சபைகளில் சமர்ப்பிக்கப்படும்.
மரபு சார்ந்த மாறுபட்ட கவிதைகள் வருகவே ..!
மரபுகள் என்றும் வாழும்.
சந்தங்கள் வாழ்க..சொந்தகள் மலர்க..!
வாழ்க தமிழ்..வெல்க நற்கவிதைகள்...!
நேசத்துடன்
கவித்தா