எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓணம் நகைச்சுவை

மலையாளி கடையில டீ நல்லா இருக்கும்னு சொல்றவன் மனுசன் , சேச்சி நல்லா இருக்கும்னு சொல்றவன் பெரிய மனுசன்... ஓணம் வாழ்த்துக்கள்

மேலும்

ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுமையும் உள்ள மலை யாளிகள் சாதி, மத வித்தியாசம் இன்றிகொண்டாடும் ஒரே பண்டிகை ஓணத்திருநாள் ஆகும். இப்பண்டிகை அறு வடைத்திருநாள் ஆகவும், கலாச்சாரத் திருநாள் ஆகவும் அமைந்துள்ளது. அதை ஒட்டி அத்தப்பூ கோலமிட்டு, அன்றைய தினம் புத்தாடை அணிந்து, சுவையான சத்திய எனப்படும் அறுசுவை உண வருந்தி, மற்றவர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். அன்றைய விருந்து முழுமையாக சைவ உணவாக இருந்தாலும் அன்றைய உணவில் அவியல் மற்றும் விதவிதமான பிரதமன் என்றழைக்கப்படும் விதம்விதமான பாயசங்கள் இடம்பெறுவது சிறப்பு. முந்தைய காலத்தில் இதை ஒட்டிஓணப்பந்து எனும் இளைஞர்களுக்கான விளையாட்டும், ஓண ஊஞ்சல்எனும் பெண்களுக்கான விளையாட்டும் பிரசித்தம். தற்போதும் அதை ஒட்டிய குழுநாட்டியம்உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அற்புதமான காட்சி.வாமனனால் வதைக்கப்பட்ட மாவேலிமன்னர் பெற்ற வரம் அடிப்படையில் தன் நாட்டு மக்களை பார்க்க ஆண்டுக்கு ஒரு தடவை வருவதாகவும், அவரை வரவேற்கவே இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது என்பது ஐதீகம். ஆனால் இன்றைய சூழலில் கேரள மக் களும் விலைவாசி உயர்வாலும் ரப்பர் விலை வீழ்ச்சி போன்ற பிரச்சனைகளாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மக்கள் மகிழ் வோடு ஓணத் திருநாளை கொண்டாடும் போதே மாற்றத்திற்கான பேராட்டங்களிலும் பெருமளவில் ஈடுபட்டு வருகின் றனர். அனைத்து மலையாளிகளுக்கும் ஓணத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும்

ஓணம் பண்டிகை வரலாறு

கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மகாபலியை சோதிக்கும் வகையில் மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து மகாபலி மன்னரிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு மகாபலி மன்னன் சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக எழுந்து உலகை இரண்டே அடியில் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி தனது வாக்கை காப்பாற்றும் வகையில் மூன்றாவது அடியை அளக்க தனது தலையைக் கொடுத்துள்ளார். அப்போது உனது தலையை நான் அளந்தால் நீ இறந்துவிடுவாயே என்று கூறிய மகாவிஷ்ணு, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டுள்ளார். அதற்கு மகாபலி ஒவ்வோர் ஆண்டும் திருவோண நாளின் நான் இந்த நாட்டு மக்களைச் சந்திக்க வருவதற்கு வரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணுவும் மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு மகாபலியின் தலையை மூன்றாவது அடியாக அளந்ததாகவும், பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வோர் ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அத்தப்பூ கோலம்:

இதில் திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்கும்விதமாக வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும் விதவிதமான பூக்களிலான பூக்கோலம் இடுகின்றனர்.குமரி மாவட்டத்தில் வீடுகள், பள்ளிக் கல்லூரிகள், கோயில்கள் ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணத்தை வரவேற்கும் செயல்கள் உற்சாகத்தோடு தொடங்கப்பட்டுவிட்டன.

மேலும்


மேலே