எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விதை நெல்லும் நீட் தேர்வும்...

உடல்வலி உள்ளத்தின் நோவு
மருண்ட திசைகள் 
புரியா மொழி
உறக்கம் மறுத்த இரவு
அச்சமூட்டிய பரிசோதனைகள்
நடுங்கிய விரல்கள் வழி 
நட்டு வைத்த விடைநாற்றுகள் ......
......இவற்றுக்கெல்லாம்தான் 
அப்பா காசு கொண்டுவந்திருந்தார்
-விதை நெல்லை விற்று....
அம்மாவின் பங்குக்கு தாலி....
அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள்.
தங்கையின் கண்களில் 
தமையனின்மருத்துவ ஒப்பனை 
ஒட்டிக்கிடக்க
ஊர்மாறி ஊர்வந்த அவன் 
“ நீட்”எழுதி 
பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற
வந்தனை வரவேற்றது 
விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன்
ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன்
விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை 
விரித்துப் பார்த்தான் 
வடை ஒன்று .....பிஞ்சிப்போய்
தன் பசிக்காய்.....??!!!!! 

- அகன்

மேலும்

நான் அனிதா

மழைக்காலத்தில் ஒழுகும் வீட்டின் சுவர் இடிந்து விழுமோவென்ற பயத்தில் தூங்கிக்கொண்டிருப்பேன்; பயந்தபடியே ஒரு நாள் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அந்த வாடகை வீட்டில் சரியாக மூடாத தாழ்ப்பாள் உண்டாக்கும் அச்சத்தைத் தைரியம் தந்து போக்குவது அம்மாதான். சாராயக் கடையில் எடுபிடி வேலை செய்து அப்பா தினக்கூலியைக் கொண்டு வந்த பிறகுதான் வீட்டில் அடுப்பு எரியும். சில ஞாயிற்றுக் கிழமைகளில் மதியச் சாப்பாடு கிடைக்கும்போது மாலை ஐந்து மணியாகியிருக்கும். அரிசி வாங்க பணம் இல்லாதபோது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாயை வைத்து மரச்சீனிக் கிழங்கு வாங்கி அம்மா சமைத்துத் தருவாள். இறைச்சி சாப்பிடுவதெல்லாம் அபூர்வமான விஷயம்; வருஷத்துக்கு இரண்டு அல்லது அதிகபட்சமாக நான்கு நாட்கள் இறைச்சிச் சாப்பாடு கிடைக்கும்.ராவல்கன் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிச் சாப்பிட எப்போதாவது பதினைந்து பைசா தருவார் அப்பா. 35 பைசாவுக்குக் காட்பரி சாக்லேட் வாங்குவது வெறும் கனவாகவே இருந்த பள்ளி நாட்கள் அவை. பசி கொடுத்த உந்துதலுக்கு வேறெதுவும் நிகர் இல்லை. வகுப்பில் வாங்கும் முதல் மதிப்பெண்தான் இதற்கெல்லாம் ஈடுகட்டும் ஒரே பதில். யாராவது சில மதிப்பெண்களில் முந்திவிட்டால் அதை முறியடிக்கும் வேகத்தை வறுமைதான் கொடுத்தது. பசி எரிபொருள்; படிப்பு மட்டுமே வறுமையிலிருந்து விடுதலை செய்யும் ஆயுதம். படிக்கிற மொழியும் அதிலிருந்து உருவாக்குகிற சொற்களும்தான் எங்கள் மீட்சிக்கான ஒரே கருவியென்ற ஞானம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்தது. யார் என்ன சொன்னாலும் படிப்பில் சமரசம் செய்யாத உறுதியை அவர்கள் தந்திருந்தார்கள்.அந்த உறுதியைக் குலைக்கும் பல விஷயங்களை அவர்களே செய்வார்கள்; சோத்துக்கு வழியில்லையென்று அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையே சண்டை வரும்போது, பக்கத்து வீட்டுப் பையன் கேரளாவுக்குக் கொத்தனார் கையாளாகப் போவதை அப்பா சொல்லிக் காட்டுவார். பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதுபோல குற்ற உணர்வில் கூனிக்குறுகிப் புழுவாய் நெளிவேன். அக்கம்பக்கத்து வீடுகளில் பட்டப்படிப்பு முடித்து பஸ் கண்டக்டராகவும் ஆசிரியராகவுமான அண்ணன்மார் நான் சிறப்பாகப் படிப்பதைப் பாராட்டி, தங்களைப்போல அரசு உத்தியோகம் கிடைக்குமென்று ஆசை காட்டுவார்கள். படித்த அரசுப் பள்ளியில் எந்தத் தரக்குறைவையும் நான் பார்க்கவில்லை. படித்து ஆளாகி பிறகு சமூகத்தைக் கவனிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் திரும்பத் திரும்பச் சொல்லித் தருவார்கள் (ரத்னாபாய் டீச்சர், அகஸ்டின் சார், பங்கிராஸ் என்று பெரிய பட்டியல் அது). படிப்பைத் தவிர வேறு எதுவும் நம்பிக்கை அளிக்காத வயது அது.1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவுக்கும் அந்தத் தெளிவை அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கழிவறைகூட இல்லாத குடிசையிலிருந்து மருத்துவப் படிப்பைக் கனவு கண்ட அனிதாவாக நான் இருந்திருக்கிறேன். அனிதாவால் 12ஆம் வகுப்புவரை தக்க வைக்க முடிந்த முதலிடத்தை என்னால் 10ஆம் வகுப்புக்கு மேல் தக்க வைக்க முடியவில்லை. காரணம், 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிவிட்டேன். கணக்கு வாத்தியாரின் கடும் சொற்களும் மொழி மாற்றமும் என் வேகத்தையும் வைராக்கியத்தையும் குறைத்தன. சில கடும் சொற்களேகூட தன்னம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும் இளம் பிராயம் அது.அம்மாவின் பைபிளையும் அப்பாவின் குர்ஆனையும் ஆசிரியை சரஸ்வதியின் கீதையையும் மாறி மாறிப் படித்து தேடல் ஆரம்பித்த நாட்கள் அவை. காட்பரி சாக்லேட் சாப்பிட்டு அப்பாவின் சிங்கப்பூர் வேலையைப் பற்றிப் பெருமை பேசிய பக்கத்துத் தெரு பிள்ளைகளினால் உண்டான தாழ்வுணர்ச்சியை ஜெயிக்க ஒருவேளை இந்த வேதப்புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிய ஆரம்பித்தேனோ என்று தெரியவில்லை. அனிதாவிடம் ஒரு முறை பேசியிருந்தால் இந்தக் கதைகளைச் சொல்லி அவளைத் தேற்றியிருப்பேனோ என்றும் தெரியவில்லை. நான் அனிதாவாக இருந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அனிதாவாகியிருக்கிறேன். மக்களின் பசியறியாத, வலியறியாத ஆட்சியாளர்களும் நீதிபதிகளும்தான் என்னைக் கொன்றுவிட்டார்கள். அவர்களைப் பதவிகளிலிருந்து இறக்குவேன். எனது ஆட்சி வரும்போது ஆயிரமாயிரம் அனிதாக்கள் டாக்டர்களாக வாழ்ந்து காட்டுவார்கள். இது சத்தியம். இது நிச்சயம் வெல்லும் சொல்.

மேலும்

அப்துல் கலாம் கனவை நாம் நனவாக்குவோம் ஆங்கில அலோபதி மருத்துவத் துறை கிடைக்காவிட்டால் வேறு இந்திய சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவத் துறையை படித்து மக்கள் தொண்டாற்ற வேண்டும் அடுத்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கவும் செய்திருக்கலாம் அரசியல் துறை , நீதித்துறை ஏழை மக்களின் அவர்கள் கனவை நிறைவேற விடாமல் தடுத்து விடுகிறதே ! 07-Sep-2017 10:17 pm
வாழ்க்கைப் போராட்டம் நினைவலைகள் கண்ணீர் இலக்கியம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 07-Sep-2017 10:09 pm

மேலே