எண்ணம்
(Eluthu Ennam)
வருடங்கள் தாண்டியஎன் வலிகள்மறையவில்லை,மறத்துவிட்டன..அன்றுமுதல்உன்னை நான்என்றுதான்மறப்பேன் என்று,இறைவனிடம் யாசிக்கிறேன்,அக்காலங்களைத்தான்இன்றும் தேடுகிறேன்.....தேடுவதலோ... (வசந்த்)
12-Mar-2018 8:31 am
வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..
அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்,
அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....
தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..
காதல் அழிவதில்லை:-நீ வேண்டாம் என்றவுடன்என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு... (கல்லறை செல்வன்)
21-Feb-2017 1:14 pm
காதல் அழிவதில்லை:-
நீ வேண்டாம் என்றவுடன்
என் கால்கள் சென்றதடி
உன்னைவிட்டு தூரம் தூரம்
என் மனம் மட்டும் நின்றதடி
உந்தன் ஓரம் ஓரம்
வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று
வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம்
மாண்டும் மறையவில்லை
உந்தன் நினைவே நினைவு
நீதானே என் கல்லரையில்
நான் காணும் கனவே கனவு....
- அழுகும் உடலுக்கு தெரிவதில்லை
காதல் அழிவதில்லை என்று...
சாகும் காதலர்க்கு புரிவதில்லை
காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று...
----கல்லரைக் காதலன்