தீக்குளியள்

ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:05 pm)
பார்வை : 37


பிரபல கவிஞர்கள்

மேலே