நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் கோ

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்

மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்

விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!

Cafe beachஇலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wallஇலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:18 pm)
பார்வை : 0


மேலே