காலங்கள் தடையறத் தாக்க

காலங்கள்... கண்முன்
பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும்... உந்தன்
நெருக்கத்தில் நாணுகிறேன்

நாளும் நாளும் உன் மேல்
எந்தன் காதல் கூடினேன்
நீளும் பாதை எங்கும்
உந்தன் கைகள் நாடினேன்

எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?

நிலவுகள் நகர்ந்திட
நினைவுகள் வளர்ந்தன அன்பே!
கனவுகள் பகிர்ந்திட
விழிகளும் அறிந்தன அன்பே!

விரிந்ததோ விரிந்ததோ
ஆளுக்கொரு பூச்சிறகு
யுகங்களைக் கடந்திட...

விரல் கோர்த்திடும் பயணங்கள்
எளிதினில் முடிவதில்லை

எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 1:07 pm)
பார்வை : 0


மேலே