கண்மணியே உனைக்காண வைத்ததாலே

கண்மணியே உனைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீபோகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகிறேன்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:28 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே