உன்னை விட்டு விட முடியாமல் . . . .

காலையில் கண் விழிப்பதே
உன் கரங்கள் என்னை
தொட்டு எழுப்புவதால் தான் . . . .

அங்கே தொட்டு , இங்கே தொட்டு
அடிக்கடி ஆடையை வேறு
விலக்கி விட்டு . . . .
நீ செய்யும் குறும்புகளை
யாரும் பார்க்காமல்
மறைப்பதற்குள் நான் படும்
அவஸ்தை ஓர் சுகமே . . .

மெல்லிய சாரலில் உன்னோடு
கை கோர்த்து
நான் பேசும் கதைகள் ஆயிரம் . . .

சுடுமணலில் நடந்தாலும்
உன் வரவு என்னை
பனியாய் குளிர வைக்கும் . . .

வேலை பளுவில் நான் துவண்டு
போகையில் , பின் கழுத்தில்
உன் ஸ்பரிசம் என்னை
புதுப்பிக்கும் . . .

நான் கலங்கி நிற்கையில்
என்னை சீராட்டி என் கலக்கத்தை
கலைத்து போடுவாய். . .
நான் கும்மாளமாய் சிரிக்கையில்
என்னோடு நீயும் குதித்து ஆடுவாய் . .

நான் வருவாய் என நினைக்கையில்
வராமல், நான் எதிர் பாராத கணம்
அருகே வந்து என்னை அணைத்துச் செல்வாய் . . .

நீ தீண்டும் நேரம் நான்
சூடாகிறேன்
உன் கைகள் என்னை
தழுவா விட்டால் நான்
வறண்டு போகிறேன் .. .

உன்னால் தான் நான் உயிர் வாழ்கிறேன்
நீ என்னை விட்டு நீங்கி விட்டால்
அந்த கணமே நானும் இல்லாமல்
போய் விடுவேன் . . .

சில நேரம் இதமாய்
முகம் வருடி ,
தலை தடவி சொக்க விடுகிறாய்
பல நேரம் மூர்க்கமாய்
மூச்சிரைக்க வைத்து
என்னோடு விளையாடுகிறாய். . .

உன்னை விட்டு விட முடியாமல்
உன்னால் வாழ்கிறேன்

என் சுவாச காற்றே. . . .

எழுதியவர் : honey (23-Jan-13, 10:53 am)
சேர்த்தது : honeywing
பார்வை : 141

மேலே