சுகமோ சுகம்
நிலவின் பிடியில்
இரவின் மடியில் உன்னை
ரசிப்பது சுகம் . . .
சுடுகின்ற மணலில் உன்
கால் சுவட்டில் பாதம் பதிய
நடப்பது சுகம் . . .
கணநேரம் உன் காலடியில்
கண் மூடி
கிடப்பது சுகம் . . .
விளையாட்டாய் கோபித்து
உன் கொஞ்சல்களை
கேட்பது சுகம் . . .
சில நேரம் உன்னை விட்டு
தனித்திருந்து
தவிப்பது சுகம் , , ,
மூடிய இமைகளுக்குள்
உன்னை சிறை வைத்து இரவெல்லாம்
விழித்திருப்பது சுகம் . . .
பெய்கின்ற மழையில்
உன்னோடு ஓர் குடையில்
ஒதுங்குவது சுகம் . . .
சற்றே என்னை காயப்படுத்தி
எனக்காய் நீ தவிப்பதை
பார்ப்பது சுகம் . . .
இவையெல்லாம்
சுகமான சுகங்கள் - ஆனாலும்
உன் இதழோரம் வெளியேறும்
புன்னகையில் மயங்குவது
என்றென்றும்
சுகமோ சுகம் . . .