சுகமோ சுகம்

நிலவின் பிடியில்
இரவின் மடியில் உன்னை
ரசிப்பது சுகம் . . .

சுடுகின்ற மணலில் உன்
கால் சுவட்டில் பாதம் பதிய
நடப்பது சுகம் . . .

கணநேரம் உன் காலடியில்
கண் மூடி
கிடப்பது சுகம் . . .

விளையாட்டாய் கோபித்து
உன் கொஞ்சல்களை
கேட்பது சுகம் . . .

சில நேரம் உன்னை விட்டு
தனித்திருந்து
தவிப்பது சுகம் , , ,

மூடிய இமைகளுக்குள்
உன்னை சிறை வைத்து இரவெல்லாம்
விழித்திருப்பது சுகம் . . .

பெய்கின்ற மழையில்
உன்னோடு ஓர் குடையில்
ஒதுங்குவது சுகம் . . .

சற்றே என்னை காயப்படுத்தி
எனக்காய் நீ தவிப்பதை
பார்ப்பது சுகம் . . .

இவையெல்லாம்
சுகமான சுகங்கள் - ஆனாலும்
உன் இதழோரம் வெளியேறும்
புன்னகையில் மயங்குவது
என்றென்றும்

சுகமோ சுகம் . . .

எழுதியவர் : honey (23-Jan-13, 11:16 am)
சேர்த்தது : honeywing
பார்வை : 268

மேலே