ஊ(கூ)டல்

உன்
கள்ளச்சிரிப்பில் வெல்கிறாய்-
என் கோபங்களை ...!
உன்
செல்லச்சிணுங்கல்களில் தொலைக்கிறாய்
நீ ஏற்படுத்திய காயங்களை...!
அதிகம்
நேசிக்க வைக்கிறாய் உன்
குழந்தை தனமான பேச்சில்...!
செய்த
பிழைகளை திருத்திக்கொள்வதாக
வாக்குறுதி கொடுக்கிறாய்-
மன்னிப்போடு...!
அடுத்த கணமே
மறந்து விடுகிறாய் நமக்குள்
நடந்த ஊடலையே...!
மீண்டும்
மன்னிப்போடு நிற்கிறாய் சிறுபிள்ளை
போல்-அதே தவறுக்காக...!
உன்னை
வெறுக்க இயலவில்லை
இப்போது...!
என்னை
சிரிக்க வைக்கிறது உன்
செய்கைகள்...!
உன்னை
அதிகம் நேசிக்க துவங்குகிறேன்-
நம் ஒவ்வொரு ஊடலின்
முடிவிலும்...!