சில ஹைடெக் கவிதைகள்!
அம்மா-
அம்மா என்றுதான் அலறியது
கீழே விழுந்து அடிபட்ட போதும்
அந்த அ.தி.மு.க. தொண்டரின் குழந்தை...!
அம்மாடா....
பிழைத்துக் கொண்டார் அவர்
அம்மாடா....
பிழைத்துக்கொண்டது அவர் பதவி!
பகுத்தறிவு-
பிள்ளையாருக்கு எறிந்த
சிதர்தேங்காய்
அருகிலிருந்த
பெரியார் சிலை காலடியில்....
அதை எடுத்து
மண்ணைத் துடைத்து....
ஆத்திகரிடமே கொடுத்தார் அவரும்.
கடல்-
இரண்டுமணிநேரமாய்
சாத்தானின் கூக்குரல்
மரணக்கடலின்
கொடூர அலைகள்
அத்தனையும் முடிந்தது
கடல் வற்றிப்போனது....
திரையரங்கில்..
விஸ்வரூபம்-
சும்மா கிடந்த சங்கை
ஊதி கெடுத்தான் ஆண்டி...!
அப்படியினா....?
அமைதியை அமளியாக்குவதா...?
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
ஹைடெக் கவிதை-
ஹைக்கூ கவிதை தெரியும்
இஃது என்ன புதுசா
ஹைடெக் கவிதை...?
காகிதத்தில் எழுதினால் ஹைக்கூ
கணனியில் எழுதியதால் ஹைடெக்!
......................பரிதி.முத்துராசன்

