தாயே மீண்டும் வரமாட்டாயா ..?

தாயே நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை
தட்டி விட்டிருக்கிறேன்
முகத்தில் துப்பியும் இருக்கிறேன் ..!

இன்று நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா ரொம்பப் பசிக்கிது.....

எழுதியவர் : கவிஞர் இனியவன் (16-Feb-13, 11:35 am)
பார்வை : 120

மேலே