சரி நிகர் சமானம்
பணிச்சுமையில் வதங்கி
நள்ளிரவில்
வீடு திரும்புகையில்
இயலாமையோடு
அழுதபடி இருக்கும்
குழந்தை...
நேசம் மேலோங்க
இழுத்தணைக்கும் நொடியில்
புகாரோடு அழைக்கும்
தொலைபேசியின் குரல்
அறுத்துபோடும்
இரவின் நிசப்தத்தையும்
என்
தாய்மையின் கண்ணியையும்