பெண்

ஆதியிலே துளிர்த்தவளை
ஆதாமின் ஏவாள் என்போம்
இடையினில் துடித்தவளை
இன்பத்து பசிஎன்போம் ...
உடைதனை களைந்துவிட்டால்
ஊருக்கு வேசி என்போம்
மறைகளை ஒதுபவள்
மாடத்து பைங்கிளி ஆவாள் ...
ஈன்றெடுத்த தாயையும்
உடன் பிறந்த தங்கையையும்
உரிமை கொண்டாடும் இவர்கள் ,
ஊர்பெண்களை மட்டும்
ஊதாரிகளாக பார்ப்பது ஏன்?