paptamil - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  paptamil
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2013
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  89

என்னைப் பற்றி...

teacher

என் படைப்புகள்
paptamil செய்திகள்
paptamil - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 2:46 pm

கடல் அன்னை கண்டெடுத்த
முத்து குவியலே ...
அலை அடிக்கும் காற்றினில் வீசும்
அசைவ வாடையே ...
கப்பலில் மட்டும் தான்
சரக்கு பரிமாற்றமா ?...
என் மக்களும் சரக்கை
தினமும் பரிமாறி கொள்கிறார்கள் ...
ஊருக்கெல்லாம் உப்பிட்டு வளர்க்கும் தாயே
உன்னை நீயே வதைத்து கொள்ளுகிறாயே ...
ஊரின் பெயரில் மட்டும் தான்
"குடி" க்கு "தூ" என்று துப்புவோம் ...
நிஜத்தில் குடியை வாழ்த்துவோம் ...
எங்கள் வாழ்க்கை கப்பலை
தரை தட்டி நிறுத்த விட்டு
முன்னேற்ற பாதையில் முத்தெடுக்க
அழைக்கிறார்கள் ...
குடியும் குடித்தனமுமாக வாழ
எங்களுக்கு பழக்கமாகிவிட்டது ...
வருத்தபடாதீர்கள் ...வாழ்ந்து காட்டுகிறோம் ....

மேலும்

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 12:25 am
ஆஹா அழகான படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 19-Nov-2015 2:54 pm
paptamil - விக்னேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 11:04 am

இளைஞர்களின் பெருமைக்குரியவர் யார்

அப்துல் கலாமா?

விவேகானந்தரா?

மேலும்

இவர்கள் இருவரையும் பின்பற்ற வேண்டும் என்பது என் கருத்து.. விஞ்ஞானத்திற்கு அப்துல் கலாம் மெய் ஞானத்திற்கு விவேகானந்தர் 02-Oct-2015 4:04 pm
அன்றைய இளைஞர்களுக்கு அவர்..! இன்றைய இளைஞர்களுக்கு இவர்..! அவர் மதம் சார்ந்து வாழ்ந்தார்.. இவர் மனம் சார்ந்து வாழ்ந்தார்..! 20-Aug-2015 2:09 pm
அறிவால் அறிவியலை வென்றவர் அப்துல் கலாம் ... விவேகத்தால் விதை ஊன்றியவர் விவேகானந்தர்... அறிவியலால் உலகை அளந்த நாயகனும் இளைஞர்களின் கனவு நாயகன் ...அப்துல் கலாம் , விதையின் எழுச்சியால் வீரமிகு இளைஞர்களின் கதாநாயகன் ... விவேகானந்தர், கதாநாயகன் வழியை பின்பற்றி தானே கனவு நாயகன் கனாக்கண்டார் ... 18-Aug-2015 12:33 pm
இதில் என்ன சந்தேகம் ...அப்துல் கலாம் அய்யா தான் ... ஊழல்வாதி நடுவே ஊழல் கறை படியாமல் வாழ்ந்த மனிதன் .. அவரே இளைஞர்களின் பெருமைக்குரியவர் .. அப்போ விவேகானந்தர் பெருமைக்குரியவர் இல்லையா ???? என்ற கேள்வி வரும் .. அதற்கு பதில் அப்துல் கலாம் அய்யா இளமை காலத்தில் அவுருக்கு பெருமைக்குரியவர் விவேகானந்தர் அவர்கள் ஆக இருவருமே நாட்டின் பெருமைக்குரியவர்கள் தான் ... 17-Aug-2015 10:28 am
paptamil - MUTHUKRISHNAN R அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 10:00 pm

நண்பர்களே எனது சகோதரனுடைய திருமணத்திறகு எளிய வடிவில் (கவிதை வடிவில்)தமிழில் அழைப்பிதழ் தேவை.

மேலும்

இருவேறு சோலைகளில் மலர்ந்து இருவேறு திசைகளில் மணம் வீசிய இருவேறு பூக்கள் ஒன்றாய் இணைந்து திரு"மணம்" வீச காத்திருக்கும் ஒருமண சோலையிது..........., கண்டிப்பாய் எழுதி வையுங்கள் " பூக்களை யாரும் பறிக்காதீர்கள்" என்று............, 22-Aug-2015 11:02 am
தங்களின் சிந்தனை வெளிப்படும்... உதவும் உள்ளம் வெளிப்படும்... நம்மால் சிலருக்குப் பயன் உள்ளது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது.... 20-Aug-2015 1:20 pm
உங்களால் முடிந்தால் எழுதுங்கள் இல்லையேல் விடுங்கள்... 18-Aug-2015 9:46 am
வெற்றிலை பாக்கோடு தாம்பூலம் வைத்து , வேறுபட்ட இரு மனங்களையும் இணைத்து , வேதங்கள் முழங்கவும் வெற்றிகளை குவிக்கவும் , பலகார பண்டங்களை பரிவுடன் பரிமாறிட, பக்கபலமாக பெற்றவர்கள் நிற்க , பல காலங்கள் வாழ்ந்து பண்பாட்டை காக்கவும் பண்பட்ட மணமக்களை பாசமுடன் வாழ்த்த உரிமை கொண்டு வாருங்கள் உறவுத் தோழர்களே !!!... உள்ளன்போடு வரவேற்கின்றோம் ... உவகை பூத்து காத்திருக்கிறோம் ... 17-Aug-2015 3:44 pm
paptamil - Casimier Caroline அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 7:01 pm

உண்மையிலேயே மது விலக்கை கடைபிடித்தால் ஏற்படும் வருமான இழப்புக்கு நியாயமான தீர்வை அரசுக்கு கூறுங்களேன்?

மேலும்

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு செலவு பண்ணும் பணத்தை கணக்கிட்டாலே போதும் .... 17-Aug-2015 2:41 pm
இலவசங்களை தவிர்க்க வேண்டும், அரசுக்கு வரவேண்டிய வரிபணத்தை வசூலித்தாலே போதுமானது. 14-Aug-2015 12:35 am
கல்வி அரசு உடைமை ஆக்குவதே ஒரே தீர்வு. தனியாரிடம் இருந்து கல்வியை அரசு ஏற்று நடத்த வேண்டும். 12-Aug-2015 6:29 pm
தமிழகமெங்கும் அரசு மருந்துகடைகளை (மெடிக்கல் ஷாப் ) திறக்கலாம், சாலையோர உணவு விடுதிகளை அரசே கையாளலாம், தெருக்களில் தேநீர் கடைகளை திறக்கலாம் வார்டுக்கு/ ஊராட்சிக்கு ஒரு ஷாப்பிங் மால் திறக்கலாம், அனைத்து கோவில் விழாக்களையும் அரசு நடத்தி வருமானம் பெறலாம், அரசுக்கு என்று வருடம் தோரும் நிதி சேகரிக்கலாம் 12-Aug-2015 7:43 am
paptamil - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 11:13 pm

பிறந்தால் குடி இறந்தால் குடி
வென்றால் குடி தோற்றால் குடி

இன்பத்திற்கு குடி துன்பத்திற்கு குடி
விழித்திருக்க குடி தூங்குவதற்கு குடி

குடியில் திளைக்கும் குடி மகனே
குடியின் பயனை கேள் மகனே

மதியினை மழுங்கச் செய்யும்
மனதினை குழப்பம் செய்யும்

நாவினை குளறச் செய்யும்
நாற்றமே எடுக்கச் செய்யும்

கண்களை மறைக்கச் செய்யும்
காமமும் மீறச் செய்யும்

களவுகள் செய்யச் சொல்லும்
கொலைகளும் செய்யத் தூண்டும்

சாலையில் வேகம் கூட்டி
சாவையும் தேடச் சொல்லும்

சந்தேகம் விதைதுப் போகும்
சந்தோஷம் புதைத்து போகும்

தன்னையே தாழச் செய்து
தற்கொலைச் செய்யத் தூண்டும்

சொந்தங்கள் தூரம் ஓடும்
சோகங்கள

மேலும்

மிக்க நன்றி தோழி கயல்... வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. 19-Aug-2015 12:22 pm
உண்மையான வரிகள் அருமை . வாழ்த்துக்கள் மணி .தொடருங்கள் 19-Aug-2015 8:32 am
மிக்க நன்றி நட்பே வரவிலும் கருத்திலும் மகிழ்கிறேன். நன்றிகள் பல... 15-Aug-2015 7:56 am
ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது- நாணமில்லை வெட்கமில்லை கோப்பை ஏந்தும்போது; நல்லவரும் தீயவரே போதை ஏறும் போது....ஸஸாரி கமாம பதாத தநிந்நி ஸநி தநிபநி தநிஸா.... அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே.. நல்ல கவிதை.. 14-Aug-2015 6:55 pm
paptamil - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2015 11:13 pm

பிறந்தால் குடி இறந்தால் குடி
வென்றால் குடி தோற்றால் குடி

இன்பத்திற்கு குடி துன்பத்திற்கு குடி
விழித்திருக்க குடி தூங்குவதற்கு குடி

குடியில் திளைக்கும் குடி மகனே
குடியின் பயனை கேள் மகனே

மதியினை மழுங்கச் செய்யும்
மனதினை குழப்பம் செய்யும்

நாவினை குளறச் செய்யும்
நாற்றமே எடுக்கச் செய்யும்

கண்களை மறைக்கச் செய்யும்
காமமும் மீறச் செய்யும்

களவுகள் செய்யச் சொல்லும்
கொலைகளும் செய்யத் தூண்டும்

சாலையில் வேகம் கூட்டி
சாவையும் தேடச் சொல்லும்

சந்தேகம் விதைதுப் போகும்
சந்தோஷம் புதைத்து போகும்

தன்னையே தாழச் செய்து
தற்கொலைச் செய்யத் தூண்டும்

சொந்தங்கள் தூரம் ஓடும்
சோகங்கள

மேலும்

மிக்க நன்றி தோழி கயல்... வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. 19-Aug-2015 12:22 pm
உண்மையான வரிகள் அருமை . வாழ்த்துக்கள் மணி .தொடருங்கள் 19-Aug-2015 8:32 am
மிக்க நன்றி நட்பே வரவிலும் கருத்திலும் மகிழ்கிறேன். நன்றிகள் பல... 15-Aug-2015 7:56 am
ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது- நாணமில்லை வெட்கமில்லை கோப்பை ஏந்தும்போது; நல்லவரும் தீயவரே போதை ஏறும் போது....ஸஸாரி கமாம பதாத தநிந்நி ஸநி தநிபநி தநிஸா.... அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே.. நல்ல கவிதை.. 14-Aug-2015 6:55 pm
paptamil - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 8:50 am

அன்பிற்கினியவரே ...
ஆருயிர்த்தோழரே...
இன்முகத்தோடும்
ஈகை குணத்தோடும் பழகும்
உயர்ந்தோனே ...
ஊருக்கு உழைத்த
எளியோனே...
ஏனிந்த அவசரம் ...
ஐயத்தை போக்கிய காவலனே ,
ஒருமையாய் உணர்கிறேன்
ஓங்காரமிட்டு அழுகின்றேன் ...
ஒளவை மொழி பேச நீ
எப்பொழுது வருவாய் ?

மறு பிறவி ஒன்று இருந்தால்
நீ எனக்கு மகனாக பிறக்கவேண்டும்
ஏனென்றால் , இந்தபிறவியில் நான்
உனக்கு மகளாக பிறந்துள்ளேன் அல்லவா ...
ஆண்டவனுக்கு ஏது ஆத்மா ...நீ சாந்தி
அடைந்தாலும் நாங்கள் சாந்தி அடைவது எப்போது ?

மேலும்

paptamil - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 2:09 pm

உலோக பானைகள் எல்லாம்
உருண்டோடி வந்ததனால்
மண் பானை பாத்திரம்
மறைந்த காலம் போய் ...
மறுபடியும் உன் உதவி மக்களுக்கு
வேண்டும் என மண்ணிடம் கேட்ட போது,
புதியதை பார்த்ததும் பழையதை மறந்த மானுடா !
உன் உடம்பு மட்டும் கெடவில்லை
என் உயிர்துளியும் நீங்கள்
இட்ட உரத்தால் இறந்து வெகு நாட்கள் ஆனதடா !!!
நல்லதை மட்டுமே கொடுத்து பழகிய எனக்கு
உங்களைபோல் கெட்டதை கொடுக்க
மனமும் இல்லை
மண்ணில் வளமும் இல்லை....

மேலும்

அருமை படித்தேன் ரசித்தேன் நட்பே!...தொடருங்கள் ... 02-Mar-2015 5:57 pm
paptamil - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 1:55 pm

மறவாது இருக்கவே
மறந்து போனேனே
பிறவாது இருக்கவே
பிரிந்து போனேனே
உறவாது இருக்கவே
ஊர்விட்டு சென்றேனே
மகிழாது இருக்கவே
மரத்து போனேனே
பழகாது இருக்கவே
பறந்து போனேனே
துகிலாது இருக்கவே
துண்டோடு போனேனே
இருந்தாலும் என் வாழ்வில்
இறவாத வரம் வேண்டும் ....

மேலும்

அருமை படித்தேன் ரசித்தேன் நட்பே!...தொடருங்கள் ... 02-Mar-2015 5:57 pm
paptamil - மன்சூர் அலி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 9:44 am

எழுத்து . காம்..அன்பர்கள் அனவருக்கும்..எனது முத்தான காலை வணக்கம்.

இந்த கேள்வி பகுதியிலே.. பட்டி மன்றம் நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆகவே நானாகவே ஒரு தலைப்பை வைத்து அதாவது.. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் ஆண்களா ?? இல்லை பெண்களா?? உங்கள் கருத்துகளை இங்கே அர்ங்கேற்றலாமே...யாரையும் புண்படுபடி எழுதாமல்..கருத்துகளை புரிந்து கொள்ளும் படி எழுதினால் கருத்து பரிமாற்றம் மற்றும் நமது அறிவு பரிமாற்றமும்..இங்கே அழகாய் படம் பிடித்து காட்டலாம்...

ஆரம்பிக்கிறேன் நான்..என்கருத்துகளை...

எனது அருமை எழுத்து.காம் நண்பர்களே..இந்த பட்டி மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்

மேலும்

வந்தனம் . ஒவ்வொரு மனிதற்குள்ளேயும் எல்லா உணர்வுகளும் உண்டு .அப்படித்தான் காதல் உணர்வும் .ஊமை விழியை பேசும் விழி ஏன் பின்தொடரவேண்டும் . காதலுக்கு கண்ணே இல்லை என்று சொல்லுகிறார்கள் . 21-Nov-2014 12:01 pm
அன்பு அன்பரே! அவைக்கு வந்ததற்கு ஆனந்தம் அடைகிறேன்..நான் பெண்ணை மட்டும் கூறுவது..பெண்கள் தான் ஊமை விழியில் காதலிப்பது..ஆண்கள் அப்படி இல்லையே... ஏன் உங்களுக்கு காதல் அனுபவம் இல்லையா? 20-Nov-2014 9:17 am
தலைவா வணக்கம் . பட்டிமன்றத்தில் தலைப்பை கொடுக்கும் பொழுதே முடிவையும் நீங்களே தீர்மானித்துள்ளீர் என்று தெரிகிறது . பின்னே எதற்கு வாதம் ? ஒரு ஆணை ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது என்பது இயற்கையின் நியதி . பார்வையின் பரிமாற்றங்கள் இருவரின் இதயக்கண்கள் சம்மந்தபட்டது தானே ! அதற்கு ஏன் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறீர் ? புரியவில்லை !.... 20-Nov-2014 9:08 am
எத்தனை பேர் என்ன சொல்லான்லும்...வலிய வந்து காதலிப்பது பெண்களே!!எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணிடம் போய் தன காதலை சொல்ல பயம் வரும் தயக்கம் வரும்..ஒன்றுக்கு இரு முறை ஒருவன் ஒருத்தியை பார்வையால் பார்க்கும் போது.அந்த பெண் திரும்ப அவள் அவன் மீது பார்வை செலுத்தினால்...அங்கே பார்வை காதல் ஆரம்பிக்கிறது..அப்போதே அந்த பெண் அதே பார்வையால் முகம் சுழித்தாள்.அந்த காதலுக்கு அங்கே முற்று புள்ளி வைக்க படுகிறது..இதற்க்கு காரணம் யார் பெண்கள் தானே...யோசிக்க வேண்டாமா... 19-Nov-2014 12:18 pm
paptamil - paptamil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2014 11:13 am

குருத்தாக இருந்த நான்
இதழ் விரிந்து பூத்த போது
கருத்து சொல்ல கூப்பிட்டார்கள் .....
கருத்தோடு கலகலப்பும்
என் கூடவே இருந்தது ....
கருத்த மேகம் பொழியும் நிலையில்
இந்த கானக்குயில் கவிபாடும் வேளையில்
ஒரு ஊனகழுகு வந்து
என்னை உருத்தெரியாமல்
ஆக்கிவிட்டதம்மா ....
கருத்தம்மா மாதிரி கருவில் அழிந்திரிக்கலாம் ...
இன்று கற்பு இழந்த கண்ணகியாய்
கட்சி பிழையோடு காண்பவர்கள்
பேசக்கண்டேனம்மா.....

மேலும்

paptamil - paptamil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2014 3:03 pm

மண்ணில் விழுந்த
மழைத்துளியே ...
விண்ணும் மண்ணும்
சண்டையிட்டதால்
நிலமகளை விரிசலுக்குள்
விழ வைத்து விட்டாயே !
நீ எப்பொழுது வருவாய் என்று
கானக்கருக்களில்
கதவைத்திறந்து காத்திருக்கிறோம் ....

மேலும்

நன்று தோழா 15-Oct-2014 8:57 am
நல்லாருக்கு தோழமையே... 15-Oct-2014 8:42 am
மேலும்...
கருத்துகள்

மேலே