இராசகோபால் சுப்புலட்சுமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராசகோபால் சுப்புலட்சுமி
இடம்:  சங்கரன்கோயில்
பிறந்த தேதி :  01-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2014
பார்த்தவர்கள்:  774
புள்ளி:  123

என்னைப் பற்றி...

இன்னும் சரியாவே புரியமாட்டேங்குது......

என் படைப்புகள்
இராசகோபால் சுப்புலட்சுமி செய்திகள்
இராசகோபால் சுப்புலட்சுமி - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2015 11:57 am

காதல் தோல்வி இரண்டு வரி கவிதைகள் வேண்டும்? கவிஞர்களே கொஞ்சம் பகிருங்கள் ப்ளீஸ்....

மேலும்

உன் முறிவால் முறிந்தது என் கடிகார முட்கள்........., 26-Sep-2015 2:37 pm
ஒரு இதயம் கண்ணீர் வடிக்கும் ... ஒரு இதயம் பன்னீரில் நனையும் .... 12-Sep-2015 6:17 pm
கனவில் மட்டும் இனி வானவில் 12-Sep-2015 10:35 am
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை , காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்க வில்லை , உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்க வில்லை கண் உறங்க வில்லை. 11-Sep-2015 12:54 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2015 3:00 pm

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆற

மேலும்

கனவுகள் கூடிவரும் காவிரியிலும் நீர் வரும்.. அழகு.. 05-Feb-2017 8:48 am
நம்பிக்கை வளரும் நிச்சயம் இந்த கவிதை vaasithaal 08-May-2016 1:06 pm
நன்றி நட்பே , தங்கள் வருகையில் ,கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 30-Nov-2015 7:21 pm
விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே தேய்கிறான் சந்திரன் ... வீழ்ச்சியும்... தேய்தலும்... தேகத்திற்குத்தான்..? ஆனால் மனதிற்கு ...! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் ! 24-Nov-2015 12:51 pm

ஒரு பயணத்தின் சுகந்தத்தில்
முகமுரசிய காற்றை
உயிர்வரை உள்ளிழுத்து
கண்மூடி லயிக்கையில்
எப்போதும்போல்
இப்போதும்
அறியவில்லை
அகஅழுக்குகளையும்
அக்காற்று அதன்வழி
எடுத்துச்செல்லுமென்று...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

உளவியல் உண்மை என்று நினைக்கிறேன்... 23-Aug-2015 12:03 pm
காற்றின் வழியை கண்கள் அறிவதில்லை காற்றின் மொழியை கவிஞனுக்கும் புரிவதில்லை... மிக நேர்த்தியான கவிதை தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:32 am
சிறந்த பதிவு... 21-Aug-2015 4:43 pm
சிந்தனை சிறப்பு !! வாழ்த்துக்கள் !! 21-Aug-2015 4:29 pm

கோப்புகளும்
அதன் குழப்பங்களும்
கூடவே வந்திறங்கின
அலுவலகம் விட்டு
வீடுவந்த பின்னரும்...

அடுத்தடுத்த பணிகளிலும்
அது தொடரவே
அசையாது மனம்
அயர்ச்சியிலிருக்க...

உடம்பு சரியில்லையாவென்ற
மழலையோடு சிலநொடி
மனம்திறந்து உரையாட
தன் இருப்பிடம் நோக்கி
தானாகவே நடைகட்டின
கோப்புகளும்
அதன் குழப்பங்களும்...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

மழலை என்றும் பிணி தீர்க்கும் மூலிகைகள் தான் 23-Aug-2015 12:11 pm
நான் பெரும்பாலும் அலுவலகம் முழுவதையும் அலுவலக வளாகத்திலேயே விட்டுவிட்டு பின்னர்தான் வீடு விரைகிறேன்... 23-Aug-2015 12:02 pm

அவரது வாழ்க்கை காந்தியத்தைப் பிரதிபலித்திருக்கிறது.....
அவரைப் போற்றும் நாம் அவர் நிரூபித்திருக்கிற வாழ்வியலை கடைப்பிடிகிறோமா..?
நான் முயற்சிக்கிறேன்.... நீங்கள்...?
முயற்சிப்போம்... ஒன்றுபடுவோம்...
2020 - இல் அவர் விரும்பிய இந்தியாவைப் படைப்போம்....!

மேலும்

அழுகையாய் வருகிறது...
இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே...
அவர் அதை விரும்பவில்லையே...
அப்போ நான் என்ன செய்ய...
கண்ணீரைத் துடைத்தபடி
கடமையாற்றுவேன்....
அழுதுக்கிட்டே இருந்தாலும்
உழுதுக்கிட்டேதான இருக்கணும்...

மேலும்

"கனவு காண்" என்று சொல்லி எனக்கு வாழ்வளித்தவர்...
அப்போது நான் கைத்தறி நெசவாளன்....
இன்று நான் அரசு ஊழியன்....
என் குடும்பம் அறிந்த ஒரே குடியரசுத்தலைவர் அவர்...
ஆம்... என் தலைவர் அவர்...
சிலை வைக்காமல்....
பாலாபிஷேகம் செய்யாமல்...
சுவரொட்டி ஒட்டாமல்...
சும்மானாச்சுக்கும் புகழாமல்....
உடலில் ரத்தம் உள்ளம் வரைக்கும்
உத்தமரின் வாக்குப்படி நடக்க முயற்சிப்பேன்....
என் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பேன்
"அக்கினிச் சிறகுகளை" விரிக்க....

மேலும்

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்
கட்டடம் - கட்டிடம்
ஏற்கனவே - ஏற்கெனவே

காணும்போது - காணும் போது
அவ்வாறுதான் - அவ்வாறு தான்

- இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்களில் மிகச்சரியானது எது? தவறானது எது?
சரியெனக் கூறப்படும்பட்சத்தில் ஆதாரம் எங்கு திரட்டப்பட்டது?
அதன் இலக்கணம் எதில் உள்ளது? என்பது போன்ற தகவல்களைத் தாருங்கள் நண்பர்களே....

மேலும்

அளித்த எண்ணத்தை (public) சர் நா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Aug-2014 12:27 pm

வேதனை

மேலும்

நன்றி தோழரே 07-Aug-2014 5:18 pm
சிறப்பு 07-Aug-2014 3:16 pm
கருத்திற்கு நன்றி தோழமையே 07-Aug-2014 1:42 pm
மிகவும் வேதனை தரும் விஷயம்... 07-Aug-2014 12:53 pm

ஏலே...! ஏலே...! ஓடாதே நில்லு..!
ஏன் ஓடுற? எங்க ஓடுற?
சொல்லு தம்பி!
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
......................................................................................................(ஏலே...! ஏலே...!)
இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இப்ப எங்கநீயும் போறன்னு
சொல்லிப்புட்டுப் போடா...!

இன்னும் பள்ளிக்கூடம் சேக்கல...
உஞ்சேட்ட கொஞ்சமும் கொறையல...
இங்கநீ நடத்தும் அரிச்சுவடி
வாத்திமாரும் புரிஞ்சிருப்பாரோ?
.............................................

மேலும்

கட்டுப்பாட்ட எழந்துநிக்கும் ஒரு கப்பலப் போல - நான் தவிக்கையிலே நீ பொறந்த நங்கூரம் போல...! எனக்கெனவே பொறந்துவந்த ஒரு ஆண்டவன் தான் நீயே - நான் ஒனக்கெனவே வாழ்ந்திருப்பேன் ரெட்ட உசிரோட..... நீயந்த ஆறப்போல இருக்கணும்.... உந்தடைகளத்தான் ஒடைக்கணும்... நீபோடும் உத்தரவில் ஐநாவுமே நடக்கணும்....! // சிறப்பு ராசகோபால் // 15-Jul-2014 9:38 pm
:) 10-Jul-2014 11:31 am
நன்றி நண்பா.... 10-Jul-2014 11:24 am
நம்ம தேசம் நமக்குப் பெருசு.... சட்டமும் திட்டமும் பழசு... நீவந்து... நீவந்து... மாத்திடனும் புதுசு....! அழகு :) 10-Jul-2014 11:03 am

படைப்புகளுக்கு வெறுமனே நன்று, அருமை, சிறப்பு என்றெல்லாம் விமர்சிப்பது;

படைப்பை (மட்டும்) தீவிரமாக விமர்சிப்பது; குறிப்பாக முரண்படுதலை வெளிப்படுத்துதல்.

இவற்றில் எது ஆரோக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும்?

மேலும்

வெறுமனே வாசித்து விட்டு செல்வது எந்த வகையில் சேர்க்க ?, மனதில் தோன்றும் கருத்துக்களை தெளிவுபட மனம் கோணாமல் உரைப்பதே விமர்சனத்தின் அழகு , அதே சமயம் தவறுகளையும் சுட்டி காட்ட வேண்டிய தெளிவும் நம்மிடத்தில் வேண்டும் , அதை தனிப்பட்ட முறையில் தனி மின்னஞ்சலில் கூட அனுப்பலாம் , இதனால் படைப்பாளியின் உள்ளத்தை காயப்படுத்தாமல் நாம் சொல்ல நினைத்ததையும் உரைக்கலாம் , ஏற்றுகொண்டால் நலம் , இல்லாவிடிலும் யாருக்கும் காயமில்லை , படைப்புகளுக்கு வெறுமனே நன்று, அருமை, சிறப்பு என்று விமர்ச்சிப்பது கவியின் கருத்தாழத்தை பொருத்தது ராசகோபால் 27-Jun-2014 12:01 am
நல்லதை நல்லது என்று நா மணக்க நாளும் சொல்வோம் ........! - - இது நல்ல விமர்சனம் 25-Jun-2014 10:06 am
எதையும் விமர்சிக்க வேண்டாம் நல்லதை நல்லது என்று நா மணக்க நாளும் சொல்வோம் ........! - அதில் அல்லதுகள் இல்லாமல் போகும் அதுவே சிறந்த விமர்சனம் ....! 25-Jun-2014 4:33 am
உங்கள் வரைபடத்திலுள்ள மனப் பக்குவம் இல்லாதவர்களிடம், என்ன விமர்சித்துத்தான் என்ன பயன்? நான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் என நினைப்போரும் உள்ளனரே? ஆரோக்கியமான் திருப்பத்தை ஏற்படுத்துவது விமர்சன மல்ல; விமர்சிக்கப் பட்டவரின் மன நிலை! 'பெரிய இவன்! என்னைக் குறை சொல்ல வந்துட்டான்' என்பவரிடம் விமர்சனம்தான் கேவலப்படும். 08-Jun-2014 12:58 pm
இராசகோபால் சுப்புலட்சுமி - கிருஷ்ணநந்தினி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 11:42 pm

அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு.....
உறக்கம் துறந்து துடித்து எழுந்தது......
கனவு என்பதை மறந்த தாயுள்ளம்....
ஏனோ இவள் துடிப்பில் இருந்த தாயுணர்வை
உணர மறுத்த சமூகமோ மலடி
என்றது அவளை தன் தாயுள்ளம் மறந்து....
~கிருஷ்ணநந்தினி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (42)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (42)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
பிரபு பரமராஜ்

பிரபு பரமராஜ்

பனையன்குறிச்சி,அம்பாசமுத
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே