கவிகளைப் பூப்போம்

.
..
அழகான கவிதை,
அற்புதமான வரிகள்,
ஆழமான கற்பனை,
புதுமையான சிந்தனை,
புரட்சிகரமான கருத்து.;
இன்னும் என்
ஆன்மா அப்படி
எதையும் தேடவில்லையே ஏன்?
என எண்ணும் போது
எனக்கே என் மீது
எரிச்சல்தான் ஏற்படுகிறது.
இப்படித்தான் வளரும் கவிஞன்.
ஒவ்வொருவனும் தன்னைத்தானே
சுயபரிசோதனை செய்து
தன்னைத்தானே
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கவிகளுடன் போட்டியிட்டு
கற்பனையை
வளர்த்து வளரவேண்டும்.
புள்ளிக்ளை எண்ணிப்
பின்வாங்காமல்
பொன்மொழிகளாய் எழுத்துத்
தோட்டத்தில் கவிதைப்
பூக்களாய் பூத்துக் குலுங்குவோம்
மணக்க எண்ணுஞ் செய்திகளை
மணக்க மணக்கப் பரப்புவோம்
பார்வையாளர்களே நமக்குக்
கிடைத்தற்கரிய பரிசுகள்..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா (25-Feb-13, 5:59 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 119

மேலே