சிரிக்க சில ஒரு வரிக்கதைகள்

(அன்பர்களே! கதை என்றதும் படிக்காமல் ஓடிவிடாதிர்கள் ..இவைகள் ஒருவரிக்கதைகள் ..சும்மா எழுதிப்பார்த்தேன்)

எமனின் கவலை (கதை-1)

அடேய்...மாய(ன்)ப்பதரே! 12-12-2012-ல் உலகம் அழியும் என்று நீ சொன்னதை நம்பி நானும் நிறைய அங்கதர்களை(வேலையாட்கள்) புதிதாக வேலைக்குச் சேர்த்து அவர்களுக்கு OT-யும் கொடுத்து எமலோகமே திவாலாகிப் போச்சடா!பெரியோ(யார்) சொன்னதை கேட்காதது தப்பாகப் போச்சடா!

(குடும்பத்)தலைவர் குரல் (கதை-2)

பெண்டாட்டிகள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு பிள்ளைகள் ஒன்றுக்கு மேல் பெற்றால் அப்பாக்(டக்கர்)களே!....வாரிசுப் போட்டியில் கடைசிக் காலத்தில் நீங்கள் விளையாட்டு போட்டி நடுவராக விழிபிதுங்கி வாழ(ட)வேண்டியதுதான்.

கேப்டனின் தாகம் (கதை-3)

கோர்ட்டு கோர்ட்டாக அலைந்து மூணு நாளா தண்ணியே குடிக்காமல் தாகம் தொண்டையை வரட்டுது படுபாவிப்பயலுக...தண்ணிப்பாட்டலை கையில எடுத்தாலே மேலும் கீழும் பார்க்கிரானுங்க...ஆங்...எங்கேயாவது டாஸ்மாக் இல்லாத ஊராப் பார்த்து அவதூறு வழக்கு போடுங்கப்பா...

ஒரு டூ-வீலர் புகைச்சல் (கதை-4)

சென்னையில சனிக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல ரோட்டுல வண்டி ஒட்டுனா கழுத்துல "நான் குடிகாரன் இல்லை"-னு எழுதி மாட்டிகனுமோ...?காவல்துறை கடமை வீரர்களுக்கு "எங்க இருந்து சார் வாருறீங்க?"-என்ற அன்பு முத்தமிடும் (மோப்பம் பிடிக்கிறார்களாம்)விசாரிப்பு வீடு போய் சேருவதற்குள் அயிம்பது பேரிடமாவது சொல்லுவது மிச்சமாகும்

வைகோபம் ((கதை-5)

சீறி லங்காவிலிருந்து சீறிப் பாய்ந்துவரும் ராஜபக்சே ராக்கெட்டே!நீ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் கறுப்புக் கொடி காட்டி கை வலிப்பதால் இங்கேயே நீ இந்திய ஜனாதிபதி மாளிகை அருகில் குடியேறி விடு...அலைச்சல் மிச்சம் உனக்கும் எனக்கும்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (3-Mar-13, 8:04 pm)
பார்வை : 146

மேலே