என் அம்மா வெள்ளத்தாய்

தூக்கம் வராது
கதை கேட்டு
செய்யும் தொந்தரவுகள்
அவளுக்கு
சங்கடங்களை தந்ததில்லை.
எண்ணெய் தடவி
அரப்பு தேய்க்கும் போது
தலை தட்டும் அவள் விரல்கள்
இசைஞானியின் சப்த தாளங்கள்.
முப்பது ரூபாய் கைகடிகாரத்தை
அறுபது மைல் கடந்து வந்து
கையில் போட்டு பார்த்த போதும்
பிடிச்சிருக்கா என்று கேட்கும் போது
தெரிந்த அம்மா முகம்
எப்படி எனக்கு மறக்கும்?
ஒரு அதிகாலை நேரத்தில்
\\\'அம்மா\\\' என்று கூப்பிட்டபோது
அசைவற்று கிடந்தவளை
மனசுக்குள் போட்டு
புதைத்த நாளை எப்படி மறப்பேன்?
அம்மா...அம்மா...அம்மா..
நீ எங்கிருக்கிறாய்?

எழுதியவர் : (5-Mar-13, 8:22 am)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 91

மேலே