கொலை நிலமாகும் விளைநிலம்
விட்டு வைப்பரோ
விதை தரும் நெல் வயல்வெளியை?
' கட்டு கலம் காணும்' என கூறி
சுற்றிவரும் சூரியனை
நமக்கு சொல்ல வைத்த
பூமி எங்கே?
வெட்டி மனிதர்களால்
விலை பேசும் மனைகளாகி
கொட்டும் பணம் சேர்க்கும்
கொடுமையினை என் சொல்ல?