கொலை நிலமாகும் விளைநிலம்

விட்டு வைப்பரோ
விதை தரும் நெல் வயல்வெளியை?
' கட்டு கலம் காணும்' என கூறி
சுற்றிவரும் சூரியனை
நமக்கு சொல்ல வைத்த
பூமி எங்கே?
வெட்டி மனிதர்களால்
விலை பேசும் மனைகளாகி
கொட்டும் பணம் சேர்க்கும்
கொடுமையினை என் சொல்ல?

எழுதியவர் : முருகன் தில்லைநாயகம் (7-Mar-13, 9:15 am)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 155

மேலே