இந்திய அரசையும் இலங்கை அரசையும் வறுத்து எடுத்த எதிர்க்கட்சிகள்....!
இந்திய அரசையும் இலங்கை அரசையும் வறுத்து எடுத்த எதிர்க்கட்சிகள்....!
இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்த வாக்கெடுப்பு அற்ற பொது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த திமுக வின் வேண்டுகோளை ஏற்று,. இன்று மக்களைவை சபாநாயகர் திருமதி மீராகுமார் அனுமதி அளித்ததை ஏற்று திமுகவின் தி.ஆர்.பாலு விவாதத்தை துவங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சி மற்றும் திரினாமூல் கட்சிகள் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை...நடந்து முடிந்த ஈழப்படுகொலையை விளக்கி... கேள்வி மேல் கேள்வி கேட்டு விவாதத்தை துவங்கி விட்டார்கள்..
டி.ஆர்.பாலு தனது ஆரம்ப உரையில், நாங்கள் தனி ஈழம் கேட்கவில்லை ஆனால் நடந்து முடிந்த போர்க்குற்றம் மற்றும் தமிழர்களின் அரசியல் உரிமை பற்றியே கேட்கிறோம் என்றார்..தமிழர்களின் மீது அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் தனி ஈழம் தவிர வேறு வழியில்லை என்றார். பாரதிய ஜனதா கட்சியின் யஸ்வந்த் சின்கா விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுது, விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கப்பற்படை தான் அழித்தது என்றார்.
இந்த இலங்கை யுத்தத்தை இந்தியா தான் நடத்தியது என்று போர் முடிந்த பிறகு இலங்கையின் ராஜபக்சே கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும் சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலையை நியாயப்படுத்த முடியாது என்றார்...மனம் வெம்பினேன் என்றார். கடைசியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவே ஒரு தனி தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்றார்.
ஏனைய பாஜக எம்.பி.ஒருவர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா முழு காரணமாக இருந்தது என்றார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.சௌகான், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கறது என்றார். இவற்றையே ஐக்கிய ஜனதா தள எம்.பி.யும் கூறினார்.
சமாஜ் வாதியின் முலாம் சிங் யாதவ், அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும். அப்படி நடைபெறவில்லை எனில் இந்தியா கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக வின் தம்பிதுரையோ, ஆசிய விளையாட்டுப் போட்டியை புறக்கணித்தும் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தும் உள்ளோம்..அதுபோல இலங்கையில் காமன் வெல்த் சபையை நடத்தக் கூடாது என்றார்.
லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஏன் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தீர்கள் என்றார்..? இவ்வாறாக பல்வேறு கட்சியினரும் ஒட்டு மொத்தமாக இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல கேள்விகளை கேட்டனர்.
இறுதியாக இவற்றுக்கெல்லாம் இவ்வாறு பதில் கூறினார் சல்மான் குர்ஷித்.
இந்தியா பெரியண்ணன் போல நடந்து கொள்ள முடியாது...உலக போலீஸ்காரன் போல செயல்பட முடியாது என்றும், தமிழர்களுக்கு 13 ம் சட்டத்தையும் தாண்டி உரிமைகள் பெறுவதற்கு பேசுவோம்...வீடு கட்டிக் கொடுப்போம்..நமது நட்பு நாடு என்றார்..இடையில் குறுக்கிட்ட திமுக மற்றும் அதிமுக கட்சியினர் இதையே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு அவரின் பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்...அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத குர்ஷித் மேலும் பேசுகையில், அமெரிக்காவின் தீர்மானம் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை...முடிவு எடுக்கும் பொழுது உங்களின் உணர்வுகளை மதிப்போம் என்றார்.
ஆக, இந்த பேச்சில் திருப்தி அடையாத யஸ்வந்த் சின்காவும் வெளிநடப்பு செய்தார் அவரோடு பாஜாகாவும் வெளிநடப்பு செய்தன...கூட்டமே இல்லாத சபையில் சல்மான் குர்ஷித் தனது பேச்சை பேசி முடித்தார்...இவையெல்லாம் இன்று முழுதும் நடந்த இலங்கைப் பிரச்னை குறித்து விவாதம் செய்யப்பட்ட விசயங்கள்...முழு விபரங்களையும் நாளை தெரிந்து கொள்ளலாம்...
திமுகவின் கலைஞர் மாத்தி பேசினார் முன்பு பேசியதை மறுபடியும் மாத்தி பேசினார்...பிரனாப்பும் பிரதமரும் சொன்னார்கள் போர் முடிந்து விட்டது என்று...பிறகு இந்தியாவுக்கு ராஜபக்சே போர் முடிந்து விட்டது என்று சொன்னதால் இந்தியாவும் நம்பி என்னிடம் சொன்னது என்றார்...போர் முடிந்து விட்டது என்று பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம் என்றார்.
ஆக, வே.பி.பாலச்சந்திரன் அவர்களின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக மக்களிடத்தில்...திமுக என்ற கட்சி பெரும் துரோகம் செய்து விட்டது தமிழர்களுக்கு என்று. அ .தி.மு.க.வும் இலங்கைப் பற்றி பேச...மதிமுக... தொல்.திருமா என்று காங்கிரஸ் தவிர தமிழகத்தில் அணைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் கோபத்தை பிரதிபலிக்க...திமுக விற்கோ கடும் நிர்பந்தங்களை உருவாக்கி விட்டன...எதையாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றிவிடலாம்...போராடுவது போல போராடி மடைமாற்றி விடலாம் என்று போராடிக்கொண்டிருக்கின்றன....எல்லாக் கட்சிகளையும் முந்த வேண்டும் என்றுதான் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு இல்லாத விவாதமாக கொண்டு வந்தார்கள்...
காங்கிரஸ் கட்சியின் இந்த விவாத அனுமதிக்கு பின்னால் பல ரகசியங்கள் இருக்கின்றன என்றாலும், திமுக விற்கோ எல்லோரையும் முந்த வேண்டும் என்ற நிர்பந்தம் ஒருபுறம்...தொடர் தோல்வியில் இருக்கும் பொழுது தேர்தலில் நாம் இந்திய அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுவோம் என்ற அச்சமே பெரிதும் காணக் கிடக்கின்றன...
ஆக, சூடு பிடிக்குமா ..? இலங்கை விவகாரம் அல்லது காங்கிரஸ் கட்சி பேசுவதெல்லாம் பேசி விடுங்கள்...நாங்கள் எப்பொழுதும் போல எங்கள் வழியிலேயே செல்வோம் என்று இருக்குமா...? என்பதை வரும் தினங்களில் பார்க்கலாம்....
இந்த தீர்மானம் ஒன்றுமே இல்லையென்றாலும் ஆசிய புவிசார் அரசியலை விரைவுபடுத்தும் என்று கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்...!
சங்கிலிக்கருப்பு