மகளிர் தின நல்வாழ்த்துகள்

இந்த உலகத்தில் செத்து மடியும் பூச்சி, பறவை, விலங்குகள் போல ஆணும் பெண்ணும் ஒரு சக உயிரினம். அவ்வளவுதான். இதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று ஒன்றுமில்லை.
பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்த போது "பெண்களே கலச்சார ஆடையை அணியுங்கள், வெளியில் அதுவும் இரவில் வராதீர்கள், காதல் செய்யாதீர்கள்" என தன் கேவலமான அக்கறையை, கருத்தை பதிவு செய்த அறிவுஜீவிகள் யாரும்
" ஆண்களே கற்பழிக்காதீர்கள் " "அது சட்டவிரோதம், அது ஒரு மட்டமான செயல், மிருகங்கள் கூட ஒழுக்கமாக வாழ்கிறது.. உங்களுக்கென்ன?" என்று ஆண் சமூகத்தை நோக்கி தங்கள் கேள்வியையும் கருத்தையும் முன் வைக்காதது ஏன்?
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இம்மண்ணில் என் ஆதிக்க எண்ணத்தால் ஒரு உயிரின் சுதந்திரமும் சுகமும் பறிபோகுமெனில் ஒட்டு மொத்த சமூதாயத்தாலும் நான் புறக்கணிக்கப்பட வேண்டியவன்.
பெண் இந்த உலகத்தின் மாற்று சக்தி. பெண்ணின் திறனும் வல்லமையும் ஆண்களுக்கு நிகரானது அல்லது மேலானது... ஒருபோதும் கீழானதல்ல.
அவள் யாருக்கும் அரசியில்லை, அவள் யாருக்கும் அடிமையில்லை.
பெண் என் சக உயிர்... எனக்கு சமநிலை. அவள் ஒரு போக பொருளில்லை.
பெண்களுக்கான சம உரிமையும், சுயமரியாதையும், முழுநேசத்தையும் அனிச்சையாக வழங்குவதே என் வாழக்கையின் முழுமை, ஆண் என்பதன் அர்த்தம்.
பெண்களுக்கு இழிவு இழைக்கும் ஆண்களை நான் ஆண்கள் என்று ஏற்று கொள்வதில்லை. அவர்கள் தான் ஆண்கள் எனில் நான் ஒரு ஆண் இல்லை.
பெண்கொடுமைகளுக்கு எதிராக போராடுவது என் சமூக கடமை.
ஒவ்வொரு கொடும் நிகழ்வுக்கு காரணம் இந்த சமூகம் என்று குற்றபத்தரிக்கையை சமர்பிக்கும் முன் தனி மனித ஒழுக்கத்தில் நாம் எப்படிப்பட்டவர்கள்? என்கிற சுயபரிசோதனை செய்து கொள்ளுதல் தர்மம்.
நீங்களும் நானும் ஒன்று சேர்ந்ததே சமூகம். ஆக சமூதாயத்தில் எந்த கொடுமை நிகழ்தாலும் அதற்க்கு நாமும் உடந்தை என்பதை கருத்தில் கொள்வோமாக.....
இன்றைய தினத்துக்காக மட்டும் இதை கூவி கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இதை வாழ்வின் நுனி வரை நினைவில் வைத்து செயல்பட வேண்டியது ஒழுக்கம்.
இன்றோடு ஒழியட்டும் ஆண் ஆதிக்க குணம்.
இனிவருவதெல்லாம் பெண் சாதிக்கும் தினம்.
ஆண்கள் சார்பாகவும் அரவாணிகள் சார்பாகவும்
எங்கள் சக உயிரான பெண்களுக்கு
"மகளிர் தின நல்வாழ்த்துகள்"
இந்த உலகத்தில் ஒரு உயிரினம்
---- தமிழ்தாசன் ----