மகளிர் தினம்

மகளிரெலாம் கல்வியிலே
ஓங்கி நின்றால்
மருத்துவமே அவ்வீட்டில்
தேவை இல்லை .

மகளிரெலாம் அரசியல்
கைப் பற்றி ஆண்டால்
மாநிலத்தில் போரில்லை
இல்லை என்பேன் .

பகையில்லை ;இன்மையிலை
பிணியும் இல்லை ;
பழிஎதும் வந்துரவே
வாய்ப்பும் இல்லை .

வகையான உலகொன்று
சமைத்தல் கூடும்
வளம் அங்கே மண்டியிடல்
காணக் கூடும் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Mar-13, 1:06 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 113

மேலே