மகளிர் தினம்
மகளிரெலாம் கல்வியிலே
ஓங்கி நின்றால்
மருத்துவமே அவ்வீட்டில்
தேவை இல்லை .
மகளிரெலாம் அரசியல்
கைப் பற்றி ஆண்டால்
மாநிலத்தில் போரில்லை
இல்லை என்பேன் .
பகையில்லை ;இன்மையிலை
பிணியும் இல்லை ;
பழிஎதும் வந்துரவே
வாய்ப்பும் இல்லை .
வகையான உலகொன்று
சமைத்தல் கூடும்
வளம் அங்கே மண்டியிடல்
காணக் கூடும் !