நிர்வாணமே பூரண சுதந்திரம்( அஹமது அலி)

ஆடையில்லாதவன்
அரை மனிதன் என்றால்....
அரைகுறை ஆடையில்
அலைபவன் ஆடையணிந்தும்
அவன் முழு மனிதனா.?
பிற பெண்களின்
ஆடை குறைப்பு
அழகென்றால்...
அன்னையருக்கும்
சகோதரிகளுக்கும்
மனைவியருக்கும்
அவ்வாறோ.?
இதை எவரும்
ஒப்புவாரோ.?
முக்காடும்
முழு ஆடையும்
அன்னை தெரசா அணிந்தால்
அது அடக்கம்
ஆமினா அணிந்தால்
அடக்குமுறையா?
கன்னியாஸ்திரிகள் அணிந்தால்
அது கண்ணியம்
கதீஜா அணிந்தால்
அது கட்டுப்பாடா?
துறவிகள் அணிந்தால்
அது மனத் தூய்மை
கடமை விரும்பிகள் அணிந்தால்
அது மடத்தனமா?
ஆடை குறைப்பில் தான்
சுதந்திரம் உண்டென்றால்....
நிர்வாணமே பூரண சுதந்திரம்.
சம்மதமா?
.............................................................................
இது தோழி ஹுஜ்ஜா அவர்கள் எழுதிய "முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணியணும்?" என்ற கவிதைக்கு பரிசாக இதை சமர்ப்பிக்கிறேன்.
..................................................................................