உண்மைக் காதல் ---கவின் சாரலன் ----குறுங் கட்டுரை

ஒருவரை ஒருவர் புரிதல் ஒருவரை ஒருவர் அறிதல் உள்ளத்தால் உணர்தல் என்றும் மாறா அன்பு பூண்டு ஒழுகுதல் இவை உண்மைக் காதல் .
வாழ்வின் வளமையிலும் ஏழ்மையிலும் உயர்விலும் தாழ்விலும் உனக்காக நான் எனக்காக நீ என்ற உறுதியோடு இருத்தல் உண்மைக் காதலின் லட்சியங்கள் .
கூழானாலும் உன்னோடு குடிசையானாலும் உன்னோடுதான் என்று உறுதியோடு வாழ்பவர்களே உண்மையான காதலர்கள்.

சாத்திரம் அறியாவிட்டாலும்
சாயந்திரங்கள் சத்தியமானவை
காதல் கங்கைபோல்
காவிரிபோல்
புனிதமானது
ஆழமானது
ஆழமற்ற காதல்
வெறும் மாலை மயக்கம்
கண்ணீர் கவிதையானது
உலகில்

விழியில் வேலேந்தி நிற்பாள் முன்
மண்டியிட்டு கரம்பற்றி
முத்தமிட்டால்தான்
உண்மைக் காதலில்
வாளேந்தி நிற்போருக்கும்
வெற்றி உண்டு !

இது பரம ரகசியம் மற்றவர்களுக்கு உரைத்தல்
கூடாது

என்ன சரிதானே வாளேந்தி வெற்றி ?
----அன்புடன்,கவின் சாரலன்

கவிக் குறிப்பு :கவி நனன்பர் வாளேந்தி வெற்றியின்
கேள்விக்குத் தந்த பதில். இங்கே உண்மைக்
காதல் விழைவோருக்கு மட்டும்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-13, 4:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே