போதவில்ல...(அகன் )
நீளம் அகலம் போதவில்லை.
ஞாலம் முழுதும்
எவருக்கும் எதற்கும் ...
நீந்தும் பறவைக்கு
அகலம்
போதவில்லை
வானில்.....
ஊர்ந்திடும் எறும்பிற்கு
நீளம்
போதவில்லை
நிலத்தில்....
பாயும் அருவிற்கு
அகலம்
போதவில்லை
மலையிடுக்கில்....
ஓயும் கடலலைக்கு
நீளம்
போதவில்லை
கடற்கரையில்...
ஓடும் நதிக்கு
நீளம்
போதவில்லை
நில ஓரங்களில்...
ஆடும் மயிலுக்கு
அகலம்
போதவில்லை
தன தோகையில்...
எழுதும் கவிஞனுக்கு
தான் எழுதியது
எதுவும் போதும்
என்று
நினைத்தால் அவன் இறந்தான் !!
அவனை
அடக்கம் செய்ய
நீளமும் அகலமும்
போதா
மண்ணில்.