நேசக்குழந்தைகளாவோம்...

பொல்லுபிடித்துக்கொண்டும்
புதுக்கவிதை பாடுவோம்
பூங்காற்றில் ஏறிச்சென்று
புதுவார்த்தை தேடுவோம்
அந்திசாயும் நேரத்தில்
அழகு நிலவையும்
ரசிப்போம்
முந்தி முந்தி ஓடிடும்
முதல் அலையை
பிடிப்போம்
கடலை பிடிக்கும்
குழந்தைகள் போல்
மாறுவோம்
விடலைப்பருவம் போனாலும்
விண்ணில் மீன்கள்
பறிப்போம்
காலம் சென்றாலும்
கைகள் கோர்த்து
நடப்போம்
காதல் தேவையில்லை
காம வேலையுமில்லை
கவிதை சேகரிப்போம்
உலகை தாண்டி
பறக்கும் மனசின்
வேகம் அதிகரிப்போம்..
நிலவு வானில்
நீயும் நானும்
நேசக்குழந்தைகளாவோம்