வெற்றி தரும்..!!!!

ஊற்றெடுக்கும்
நினைவுகளை
ஓரங்கட்டி
வைத்தால்
நேற்று முளைத்த
வேதனையும்
நெஞ்சுக்குள்ளே
இருந்துவிடும்
காற்றினிலே
கவிதையாக்கி
கைப்படவே
எழுதிவிட்டால்
வெற்றிடத்தை
நிரப்பிவிடவே
வேறு எண்ணம்
தோன்றிவிடும்
சுற்றிவரும் உலகம்
அதைப் பற்றியதே
வாழ்க்கையும்
முற்றிவிடும் ஞானம்
முளித்திருந்தால்
போதும்
வெற்றி தரும்
விதையாய்
வசந்தம்
வீட்டினுள்ளே
நுழையும்!!