தோழர்களின் பார்வைக்கு !

ஒரு துளியின் சுமை ......
எப்படிச் சுமக்கிறது
என் ஒட்டு மொத்த பாரத்தையும்
இந்த ஒரு சொட்டு
கண்ணீர்த் துளி !
நமது அன்பு தோழர் திரு.ராஜேஷ் அவர்கள் எழுதிய இக்கவிதை சென்ற மாதம் இறுதி தேர்வு பட்டியலில் தேர்வாகி இருந்தது தங்கள் அனைவருக்கும் தெரிந்ததே
இக்கவிதை இந்த எழுத்துலக எளியவன்,அடியேன் நவீனுக்கு மிகமிக பிடித்தும், சிந்தனையை மேன்மேலும் தூண்டவும் செய்தது
அதில் சில துளிகளை தொகுத்து தோழர்களாகிய தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்
ஒரு துளி
என் ஒட்டுமொத்த
பாரத்தையும் சுமந்தபடி
கருப்பையை நோக்கி
நீந்தி அங்கு
இன்னுமொரு துளியோடு
சங்கமித்து வளர
ஆரம்பித்தது!
அது மேன்மேலும்
வளர தொப்புள்
கொடி தொடர்பின்
தயவில் தாயுடன்
தொடர்பு கொண்டு
சில சத்தான
ஆகர துளிகளை
உட்கொண்டு வளர்ந்தது!
பத்து மாதங்களுக்கு
பிறகு பிறந்த
உடன் தாயின்
பால்துளிகளை பாசத்தோடு
பருகி வளர்ந்தது!
வாழ்வில் முன்னேற
கடுமையாய் உழைக்கும்
தருணங்களில் வேர்வைதுளிகள்
வெளிவந்து என்
உடல் உஷ்ணத்தை
கட்டு படுத்தி
எனை காத்தது!
அழுதால் வருவது கண்ணீர்துளி!
சிரித்தாள் வருவது ஆனந்த நீர்துளி!
பார்செழிக்க வருவது மழைத்துளி!
சுவை மிகுந்தது தேன்துளி!
சிப்பியில் பிறக்கும் முத்து மழைத்துளி!
புஷ்பத்தில் பிறப்பது பன்னீர் துளி!
புல்லின் அழகு பனித்துளி!
தானத்தில் சிறந்தது இரத்தத்துளி!
இதோ இங்கு
எழுதவும் எனக்கு
உதவியது சில
மை துளிகள்!
வேற்று கிரகத்தில்
சென்று நம்
பூமியை சற்று
பாருங்கள் சின்னச்சிரிய
புள்ளியாய் அழகிய
ஒரு துளியாய்
நம் பரந்து
விரிந்த பூமி!
இப்படி எண்ணற்ற துளிகள்தான் நம் ஒட்டுமொத்த பாரங்களையும்
தாங்கி நிற்கிறது ராஜேஷ்
சிந்திக்க வைத்த
தங்கள் கவிதைக்கு
ஒட்டுமொத்த தோழர்களின்
வாழ்த்தை தாங்கியபடி
ஒரு குட்டி துளியாய்
நான்!
அன்புடன் நவீன் மென்மையானவன்