தமிழ் புத்தாண்டு வாழ்த்து

பெயரினில் 'விஜயம்' வைத்த பெருந்தவமே எம் சித்திரையே,
பெயர் சொல்ல நீ வந்தால் பெறும் நற்பேறும் எங்களுக்கே.
கொலைகொள்ளை இல்லாத குவலயமே வேண்டுகிறோம்.
குற்றம் ஏதுமில்லாது காத்திடுக இனி மேலும் சித்திரையே.
காடு கழனி செழிக்க வேணும் ,கனத்த மழை பெய்ய வேணும்
கானகமும் செழிக்க வேணும் கற்றவரும் உய்ய வேணும்.
சித்திரையே வருவாய் சிறப்பினையே நித்தம் தருவாய்

எழுதியவர் : முருகன் தில்லை நாயகம் (12-Apr-13, 9:52 pm)
பார்வை : 186

மேலே