வாழும் மரணம்...
வண்ணப் பறவைகளே
வானத்தின் ஒப்பனை
வந்தமர்ந்து பறக்கும்
பட்டாம்பூச்சிகளே
மலர்களின் ஒப்பனை
ஓடும் நதிக்கரைக்கு
கூழாங்கற்களே ஒப்பனை
வீரிய கவிதை வரிகளுக்கு
உண்மையே ஒப்பனை
வயிறு ஒட்டிய தொழிலாளிக்கு
நியாயக் கூலியே ஒப்பனை
ஆனாலும் ,
புவிக்காற்று மட்டும்
மனித சுவாச ஒப்பனையில்ல...
விடுதலைத்துளிகள் கலந்த
காற்றே ஒப்பனை..
இங்கு
ஒப்பனை அற்ற வாழ்வு
வாழும் மரணம்.