பெற்றோர் விற்ப்பனைக்கு

வருடத்தில் ஓருநாள் மட்டும்
அன்னையர் தினம் கொண்டாடும்
அன்பு மகனே!!
அடுத்த நாள்-
உன் அன்னையை
முதியோர் இல்லத்தில்
முகவரி கூட கொடுக்காமல்
சேர்த்து விடும்
அதியசத்தை நீ தான்
நிகழ்த்தினாய்

பிள்ளை இருந்தும்
அனாதையாய்
எல்லாம் இருந்தும்
பிச்சைகாரியாய்
விலங்கோடு பிணைந்து
விபத்தில் இறந்த போது
அரசாங்கம் தரும்
ஐம்பதாயிரம் அள்ளி செல்ல

நீ வந்து-
முதலைக் கண்ணீரை
முதல் தடவை விடும்
அதிசயத்தை நீ தான்
நிகழ்த்தினாய்..!!!

எழுதியவர் : கா மணி சாரோ (14-Apr-13, 10:18 pm)
சேர்த்தது : மணி
பார்வை : 123

மேலே