நோய்க்கு தடுப்பு

பொதுவாக மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்க
முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் எலிக்காய்ச்சல் என்ற லெப்டோஸ்பைரோசிஸ் ஆகியவை
முக்கியமான வை.
டெங்கு காய்ச்சல்: இது பிளேவி வைரஸ் என்ற நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது. இதை பரப்புவது ஏடிஸ் வகை கொசுவாகும். அதிகமான காய்ச்சல் உடம்புவலி, தலைவலி, வயிற்றுவலி, வாந்தி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.
ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த டெங்கு காய்ச்சல் சாதாரணமாக மிகஎளிதில் குணப்படுத்தக்கூடியதுதான். ஆனால் சில பேருக்கு ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகள்(டப்ஹற்ங்ப்ங்ற்ள்) குறைவதாலும் மற்றும் சிலருக்கு உடலில் உள்ள நீர்சத்தும், ரத்த அழுத்தமும் குறைவதாலும் (ஈங்ய்ஞ்ய்ங் நட்ர்ஸ்ரீந் நஹ்ய்க்ழ்ர்ம்ங்) வியாதியானது அதிகமாகி சிலநேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.
நமது மாவட்டத்தில் இதுவரையிலும் சுமார் 300 பேர் வரையிலும் இந்நோயினால் உயிரிழந்திருக்கின்றனர்.
நோயின் அறிகுறிகள்: அதிக காய்ச்சல், உடம்புவலி, வாந்தி, அடிவயிறுவலி, கண்ணை சுற்றிலும் வலி, போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். சாதாரணமாக எல்லா வைரஸ் காய்ச்சல்களிலுமே இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கும்.
ஆனால் சிக்குன்குனியா, இன்ப்ளூயன்சா போன்ற காய்ச்சல்கள் வெகுவாக மூன்று நாள்களில் சரியாகிவிடும். 3 நாள்களுக்குள் காய்ச்சல் குணமாகவில்லை என்றால் கண்டிப்பாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
நோயை கண்டறியும் விதம்:
1.இஹழ்க் பங்ள்ற்
2.உப்ன்க்ஷ்ஹ பங்ள்ற்
இந்த இரண்டு ரத்த பரிசோதனைகளையும் செய்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை கண்டுபிடித்து விடலாம்.
நோய்க்கான சிகிச்சை முறை
இது ஒரு வைரஸ் காய்ச்சல் என்பதால் இந்நோய்க்கான அய்ற்ண்க்ஷண்ர்ற்ண்ஸ்ரீள் எதுவும் கிடையாது. அறிகுறிகள் குறைவாக இருந்தால் வெளிநோயாளியாக கூட சரிசெய்துவிடலாம்.
அதிக வாந்தி மற்றும் காய்ச்சல் இருக்குமானால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும். ஈங்ய்ஞ்ன்ங் நட்ர்ஸ்ரீந் நஹ்ய்க்ழ்ர்ம்ங் வகையைச் சேர்ந்ததாக இருக்குமானால் தண்ய்ஞ்ங்ழ் கஹஸ்ரீற்ஹற்ங், சர்ழ்ம்ஹப் நஹப்ண்ய்ங் போன்ற ஐ ய ஊப்ன்ண்க்ள் கொடுக்க வேண்டும். ரத்தத் தட்டுகள் (டப்ஹற்ங்ப்ங்ற்ள்) குறையுமானால் டப்ஹற்ங்ப்ங்ற் இர்ய்ஸ்ரீங்ய்ற்ழ்ஹற்ங் கொடுக்கவேண்டும். சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கொடுப்போமானால் எந்தவித உயிரிழப்புமின்றி முழுமையாக குணமாக்கிவிடமுடியும்.
நோய் பரவாமல் தடுக்கும் முறைகள்
இந்நோய்க்கு தடுப்பூசியோ அல்லது தடுப்பு மருந்தோ கிடையாது. கொசுவை ஓழிப்பதன் மூலம் மட்டும்தான் இந்நோய் பரவுவதை தடுக்க முடியும்.
1. ஏடிஸ் கொசு நல்ல தண்ணீரில் முட்டையிடும் வளர்ச்சியடையக் கூடியதால் நம் வீடுகளில் குடிப்பதற்காக பாத்திரங்களில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை காற்று புகாத வண்ணம் மூடிவைக்கவேண்டும். நம் உபயோகத்துக்காக தொட்டி மற்றும் டிரம் ஆகியவற்றில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரையும் மூடி வைக்கவேண்டும். பெரிய தொட்டிகளை மூடிவைக்க முடியவில்லையானால் அதிலிருக்கும் தண்ணீரை வாரம் ஒரு முறை வெளியேற்றி பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவ வேண்டும்.
நம் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏர்கண்டிஷனர்(அஇ) ஆகியவை இருக்குமானால் இவைகளில் உற்பத்தியாகும் தண்ணீரிலும் ஏடிஸ் கொசு முட்டையிடும்.
எனவே, இந்தச் சாதனங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த ஏடிஸ் கொசுவின் இன்னும் ஒரு குணாதிசயம் என்னவென்றால் நாம் வீட்டிற்கு வெளியே தேவையற்றவை என்று போட்டு வைத்திருக்கும் தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றிலும் இது முட்டையிட்டு வைத்திருக்கும்.
மழை வந்தவுடன் இந்த பொருள்களில் தண்ணீர்விழுமானால் உடனே அந்த முட்டை பொரித்து பெரிய கொசுவாக மாறிவிடும். எனவே இது போன்ற பொருள்களை நம் வீட்டுக்கு வெளியிலும் தெருவிலும் போடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு பொருள்கள் ஏதேனுமிருப்பின் உடனே அவற்றை அப்புறப்படுத்தவேண்டும்.
கொசு நம்மை கடிக்காமல் இருப்பதற்கு கொசுவலை, ஙர்ள்வ்ன்ண்ற்ர் காயில், ஙர்ள்வ்ன்ண்ற்ர் கண்வ்ன்ண்க் போன்றவற்றை உபயோகிக்கலாம். ஆனால் இந்த ஏடிஸ் கொசுவானது காலை நேரங்களில் (6ஹம் ற்ர் 6ல்ம்) தான் நம்மை கடிக்கும். இரவில் கடிப்பதில்லை. இந்த தகவலையும் நாம் கவனித்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : arunkumar (16-Apr-13, 6:26 pm)
சேர்த்தது : S.RAVINDRAN
பார்வை : 233

மேலே